உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பதவி உயர்வில் 45,000 போலீஸ் பாதிப்பு; அரசுக்கு காவலர்கள் குடும்பத்தினர் கடிதம்

பதவி உயர்வில் 45,000 போலீஸ் பாதிப்பு; அரசுக்கு காவலர்கள் குடும்பத்தினர் கடிதம்

சென்னை : 'காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பு குறைப்பு, எல்லா காவலர்களுக்கும் பொருந்தாது' என அறிவிக்கப்பட்டதால், 45,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.தமிழ்நாடு காவலர் குடும்பங்கள் இணைந்து, காவலர் குடும்பநல அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அறக்கட்டளையின் தலைவி சத்யபிரியா, அரசுக்கு எழுதியுள்ள கடிதம்:காவல் பணியில் சேருபவர்களுக்கு எழுத, படிக்க தெரிந்து இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. அதேபோல, ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்ற அளவுகோலும் இருந்தது. கல்வி தகுதியில் வேறுபாடு இருந்தாலும், காவலர் பணியின் முக்கியத்துவம் கருதி, காவலர், ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.காலப்போக்கில் ஆசிரியர்கள் சங்கம் அமைத்து தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்து, ஊதிய உயர்வு பெற்றனர். தற்போது, காவலர்களின் ஊதியத்தை விட, பல மடங்கு அதிகம் பெற்று வருகின்றனர். எனவே, வரும் எட்டாவது ஊதிய உயர்வில், காவலர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும்.காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பை குறைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், இது, எல்லா காவலர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்காததால், 45,000 போலீசார் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கும் போது, பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. போலீஸ் அதிகாரிகள், டி.பி.எஸ்., எனப்படும், தமிழ்நாடு போலீசில் இருந்து, ஐ.பி.எஸ்., எனப்படும் இந்திய காவல் பணிக்கு செல்லும் போதும், அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இல்லை. ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நினைவூட்டல் பயிற்சி அளித்தால் மட்டுமே போதுமானது. மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களை பணி நியமனம் செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராஜா
ஜூலை 15, 2025 20:02

Lock up death என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள் அதற்கு ஏற்ப அவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார்கள் என்பது வருத்தமான உண்மை,


Suba
ஜூலை 15, 2025 19:29

போலீஸ் ஆளும் அரசியல்வாதிகளின் வேலைகாரன். They are Goverment Servent not public Servent


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 17:16

போலீஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் மனித பாதுகாப்பு அரண் என்று ஆனால் நடப்பது 1 சாதாரண மக்களுக்கு எதிரி 2 எப்படியாவது பணம் செய்யவேண்டும் 3 திருட்டு அரசியல் தலைவர்களின் பாதுகாவலன்


Padmasridharan
ஜூலை 15, 2025 07:42

எந்த பயிற்சியுமே அளிக்காமல் மக்களை ஒருமையில் அதட்டி, மிரட்டியடித்து பணம் / பொருள் புடுங்குவது எவ்வாறு செய்கிறார்கள். சம்பளத்தை தவிர வேறு லஞ்சப்பணம் வாங்க கூடாது என்ற சட்டத்தை இவர்கள் முதலில் மதிக்கிறார்களா. கூட வேலை செய்யும் பெண்களுக்கு மதிப்பளிக்கிறார்களா. இவர்கள் செய்யும் பாலியல் தொல்லைகள் வெளியில் வருவதில்லை. பணமும் பதவியும் கிடைப்பதற்கு நேராக செயல்படாமல் பாவச்செயல்கள் எதற்கு செய்கின்றனர்.


சமீபத்திய செய்தி