உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநாடு பகுதியில் துாய்மை பணியாளர்கள்; விதிமீறலால் நாறும் மதுரை மாநகராட்சி

மாநாடு பகுதியில் துாய்மை பணியாளர்கள்; விதிமீறலால் நாறும் மதுரை மாநகராட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய மாநாட்டில், விதிகளைமீறி நுாற்றுக்கணக்கான மாநகராட்சி பணியாளர்கள் துாய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், மூன்று நாட்களாக பிற வார்டுகளில் பணிகள் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமுக்கத்தில் ஏப்., 6 வரை நடக்கும் இம்மாநாட்டிற்காக வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் துாய்மைப் பணிகள் மேற்கொள்ள மண்டலம் 1, 2க்கு உட்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவன மேற்பார்வையாளர்கள் என, ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால் மதுரையின் பிற பகுதிகளில் வீடுதோறும் வண்டிகளில் சென்று குப்பை சேகரிப்பது போன்ற துாய்மைப் பணிகள் தேங்கியுள்ளன.

மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:

மா.கம்யூ.,மாநாடு துவங்குவதற்கு முதல் நாளில் இருந்தே தூய்மைப் பணியாளர்களுக்கு, மாநாடு நடக்கும் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சி சார்பில் நடக்கும் மாநாடு என்பதால் விதிமீறி செயல்படுகின்றனர். குறிப்பாக மண்டலம் 2ல் உள்ள 21 வார்டுகளில் இருந்து, தலா 5 துாய்மைப் பணியாளர், ஒரு குப்பை அள்ளும் வண்டி, ஒரு தனியார் நிறுவன மேற்பார்வையாளர், இவர்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர் ஒருவர் என தமுக்கம் மைதானம் பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியில் உள்ளனர். தவிர, மண்டலம் 3, 4ன் துாய்மை பணியாளர்கள் ரோடுகளை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டலம் 5ன் பணியாளர்களுக்கு, விமான நிலையம் ரோட்டில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி, 200 பேருக்கு விதிகளை மீறி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிற வார்டுகளில் துாய்மைப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. மாநாடு இன்னும் மூன்று நாட்கள் நடக்க உள்ளது. அதனால், மதுரையின் பிற பகுதிகளில் சுகாதாரப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

துாய்மை பணியில் பாதிப்பில்லை:

மாநாட்டிற்கு கேரள, தமிழக முதல்வர்கள் வருகை காரணமாக, மாநாடு நடக்கும் வெளிப்பகுதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்கின்றனர். உள்பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட சில பணியாளர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனையோர், தங்கள் பகுதியில் துாய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், எந்த பகுதியிலும் தூய்மைப் பணி பாதிக்கப்படாது. -சித்ரா, கமிஷனர், மதுரை மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venkat
ஏப் 04, 2025 09:59

அந்த எம் பி இதுக்கு என்ன கருத்து சொல்லுவார் திருப்பரங்குன்றம் கோவிலில் மாற்று மதத்தினர் சிலர் நடத்திய அத்துமீரலுக்கு துணை நின்று மவுனம் காத்த மாதிரி இதற்கும் மவுனம் காப்பார் எனலாம்


Bhaskaran
ஏப் 03, 2025 21:23

உண்டியல் குலுக்கிகளை இந்தியாவை விட்டு ஒழித்து கட்ட வேண்டும்


RAMESH
ஏப் 03, 2025 21:18

உண்டியல் பயல்களுக்கு ஓட்டே இல்லை இந்தியாவில்.... தமிழ்நாட்டில் தனியாக நின்றால் பட்டை நாமம்...இதில் இது வேறு தேவையா...


Parthasarathy Veeraputhran
ஏப் 04, 2025 06:52

தெருநாய்கள் கொலைக்கத்தான் செய்யும்


venkateshan G A
ஏப் 03, 2025 14:06

ஓரு புரளியை சொல்லி புலும்புகிறது


chinnamanibalan
ஏப் 03, 2025 13:36

ஒரு காலத்தில் உண்டியல் குலுக்கி தேர்தல் நிதி வசூல் செய்த கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது தேர்தல் தோறும் கூட்டணி கட்சியிடம் இருந்து, சில சீட்டும் பல கோடி நோட்டும் பெறும் நிலையில், மாநாட்டின் தூய்மைப் பணி செலவுக்காக, தங்கள் கட்சி நிதியை எடுத்து செலவிட தயங்குவது ஏன்?


Chanakyan
ஏப் 03, 2025 08:43

மதுரையின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் திமுகவின் மார்க்ஸிட் பிரிவின் தலைவர். எனவே தன் கட்சியை சேர்ந்த முதல்வரின் செல்லப்பிள்ளை சார்ந்த விழாவைவிட மதுரையின் சுத்தம் திமுகவுக்கு முக்கியமில்லை. மக்களும் அடுத்த தேர்தலில் இதையெல்லாம் மறந்து மீண்டும் இவரையே தேர்தெடுப்பார்கள்.


புதிய வீடியோ