உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் மல்லையாவுக்காக சிறப்பு ஜெயில்!

விஜய் மல்லையாவுக்காக சிறப்பு ஜெயில்!

புதுடில்லி: பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் இந்தியாவிலிருந்து தப்பித்து சென்று வெளிநாட்டில் உள்ளனர். இவர்களை நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட நாடுகளில் இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வருகிறது.'இந்திய சிறைச்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன; வெளிநாட்டில் இருப்பது போல போதிய வசதிகள் இல்லை. நாங்கள் அந்த சிறைகளில் அடைக்கப்பட்டால் வியாதி வரும்; உயிருக்கு பாதுகாப்பு இல்லை' என, இந்த குற்றவாளிகள் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளனர்.இப்படி, 'வெளிநாட்டில் உள்ள இந்திய குற்றவாளிகளுக்காக, ஒவ்வொரு மாநிலமும் சிறப்பு சிறைகளை உருவாக்க வேண்டும். இந்த சிறைகள் சர்வதேச நாடு கடத்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைக்கப்பட வேண்டும்' என, அதிகாரிகளிடம் சொல்லியுள்ளாராம் உள்துறை அமைச்சர் அமித் ஷா.அத்துடன், 'சர்வதேச குற்றவியல் அமைப்பான, 'இன்டர்போல்' வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் குற்றவாளிக்கு எதிராக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் உடனடியாக ரத்து செய்யும்படியான அமைப்பை உருவாக்க வேண்டும்' எனவும் ஆலோசனை அளித்துள்ளாராம் அமித் ஷா.தற்போது, உலக நாடுகளில் உள்ள இந்திய குற்றவாளிகளை நாடு கடத்த, 388 வழக்குகள் வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அமித் ஷாவின் ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விஜய் மல்லையா போன்ற குற்றவாளிகளை இந்தியாவிற்குள் விரைவில் கொண்டு வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rathna
அக் 19, 2025 19:37

இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்விட்ஸ்ர்லாந்து போன்ற நாடுகளில் பணம் உள்ள திருடர்களை காப்பாற்ற சட்டம் மிக பலமாக உள்ளது. இந்த சட்ட பாதுகாப்பு அங்கே உள்ள சாதாரண மக்களுக்கு கூட கிடையது. கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச கோர்ட் வரை செல்ல, வழக்குரைஞர்கள் அப்பீல்கள் மூலம் 15-20 வருடம் வரை ஆகும். இப்படி சட்டத்தால் தண்டிக்கப்பட்ட வெளிநாட்டு பொருளாதார திருடர்கள், அங்கே அரசியல் அடைக்கலம் பெற சட்டம் உள்ளது. இதனால் தான் இவர்களை கொண்டு வர இவ்வளவு வருடம் ஆகிறது என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


ராஜா
அக் 19, 2025 18:37

King fisher விமானம் ஒற்றை உபயோகம் மூலம் சிறையில் வைக்கலாமா


Sekar Times
அக் 19, 2025 17:39

ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மரண தண்டனையே சிறந்த தீர்வு


அப்பாவி
அக் 19, 2025 17:01

பேசாம பிரிட்டிஷ் ஜெயில்லேயே இருக்கேன்னு சொல்றாராம்.


Santhakumar Srinivasalu
அக் 19, 2025 10:22

இவனுங்க திருடறதக்கு முன்னாடி இந்திய ஜெயிலைப் பத்தி யோசித்திருக்கனும்


ஆரூர் ரங்
அக் 19, 2025 09:42

சில நாட்டு அரசுகளுக்கு பொருளாதார கு‌ற்றவா‌ளிக‌ள் அடைக்கலம் என்பது ராஜதந்திர பிசினெஸ். அந்நியக் குற்றவாளிகளுக்கு தமது நாட்டில் இடம் கொடுத்து சுகமாக வைத்துக் கொண்டு பல அரசியல் ஆதாயங்களை கைமாறாக கேட்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 19, 2025 09:30

எனக்கென்னவோ விஜய் மல்லையா நீரவ் மோடி முகுல் சோக்சி இவங்களைப்பத்தின செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு மக்கள் லலித் மோடியை மறந்துடணும்னு மத்திய அரசு எதிர்பார்க்கிற மாதிரி தோணுது.


ஆரூர் ரங்
அக் 19, 2025 11:01

லலித் மோடி எந்த வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றினார்?. இன்று ஐ.பி.எல் மூலம் கிரிக்கெட் பிரபலமானதற்கு அவரே காரணகர்த்தா. அதுதான் அவர் செய்த குற்றமா?.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 19, 2025 20:20

ஆரூர் ராங் அவர்களே, லலித் மோடி எந்த தவறும் செய்யவில்லையெனில் எதற்காக இந்தியாவுக்குள் வராமல் வெளிநாடுகளிலேயே 12 ஆண்டுகள் பதுங்கி இருக்கிறார். ஐபிஎல் அமைப்பை துவக்கி பிரபலப்படுத்தியது கபில் தேவ். ஆனால் ஐபிஎல் பணம் 500 கோடிகளை சுருட்டிக்கொண்டு ஓடியது லலித் மோடி.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 19, 2025 09:25

விஜய் மல்லையாவுக்காக புனேயில் ஜெயில் ரெடி ஆகுதுன்னு 2016 லேயே படிச்சுட்டேங்க. இப்போ அதே செய்தியை திரும்பி படிச்ச சிரிப்பாணி பொங்குது


Ramesh Sargam
அக் 19, 2025 09:11

வெளிநாட்டில் இருப்பது போல போதிய வசதிகள் இல்லை. நாங்கள் அந்த சிறைகளில் அடைக்கப்பட்டால் வியாதி வரும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இது நல்ல கதையா இருக்கே சிறை என்றால் அப்படித்தான் இருக்கும். சிறையில் பாகுபாடு பார்ப்பது மிக மிக பெரிய தவறு. சிறை தண்டனை என்று வந்துவிட்டால், சிறையில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக நடத்தப்படவேண்டும். சொல்லப்போனால் விஜய மல்லையா போன்ற மிகப்பெரிய பொருளாதார குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மிக மிக அதிகமாக இருக்கவேண்டும்.


பிரேம்ஜி
அக் 19, 2025 06:59

இந்திய குற்றவாளிகள் இந்த சலுகையை கேட்க கூடாதா? இது ஏற்றத்தாழ்வு! சம தர்மம் சமநீதி கொள்கைக்கு எதிரானது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை