வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்விட்ஸ்ர்லாந்து போன்ற நாடுகளில் பணம் உள்ள திருடர்களை காப்பாற்ற சட்டம் மிக பலமாக உள்ளது. இந்த சட்ட பாதுகாப்பு அங்கே உள்ள சாதாரண மக்களுக்கு கூட கிடையது. கீழ் கோர்ட்டில் இருந்து உச்ச கோர்ட் வரை செல்ல, வழக்குரைஞர்கள் அப்பீல்கள் மூலம் 15-20 வருடம் வரை ஆகும். இப்படி சட்டத்தால் தண்டிக்கப்பட்ட வெளிநாட்டு பொருளாதார திருடர்கள், அங்கே அரசியல் அடைக்கலம் பெற சட்டம் உள்ளது. இதனால் தான் இவர்களை கொண்டு வர இவ்வளவு வருடம் ஆகிறது என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
King fisher விமானம் ஒற்றை உபயோகம் மூலம் சிறையில் வைக்கலாமா
ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மரண தண்டனையே சிறந்த தீர்வு
பேசாம பிரிட்டிஷ் ஜெயில்லேயே இருக்கேன்னு சொல்றாராம்.
இவனுங்க திருடறதக்கு முன்னாடி இந்திய ஜெயிலைப் பத்தி யோசித்திருக்கனும்
சில நாட்டு அரசுகளுக்கு பொருளாதார குற்றவாளிகள் அடைக்கலம் என்பது ராஜதந்திர பிசினெஸ். அந்நியக் குற்றவாளிகளுக்கு தமது நாட்டில் இடம் கொடுத்து சுகமாக வைத்துக் கொண்டு பல அரசியல் ஆதாயங்களை கைமாறாக கேட்கிறார்கள்.
எனக்கென்னவோ விஜய் மல்லையா நீரவ் மோடி முகுல் சோக்சி இவங்களைப்பத்தின செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு மக்கள் லலித் மோடியை மறந்துடணும்னு மத்திய அரசு எதிர்பார்க்கிற மாதிரி தோணுது.
லலித் மோடி எந்த வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றினார்?. இன்று ஐ.பி.எல் மூலம் கிரிக்கெட் பிரபலமானதற்கு அவரே காரணகர்த்தா. அதுதான் அவர் செய்த குற்றமா?.
ஆரூர் ராங் அவர்களே, லலித் மோடி எந்த தவறும் செய்யவில்லையெனில் எதற்காக இந்தியாவுக்குள் வராமல் வெளிநாடுகளிலேயே 12 ஆண்டுகள் பதுங்கி இருக்கிறார். ஐபிஎல் அமைப்பை துவக்கி பிரபலப்படுத்தியது கபில் தேவ். ஆனால் ஐபிஎல் பணம் 500 கோடிகளை சுருட்டிக்கொண்டு ஓடியது லலித் மோடி.
விஜய் மல்லையாவுக்காக புனேயில் ஜெயில் ரெடி ஆகுதுன்னு 2016 லேயே படிச்சுட்டேங்க. இப்போ அதே செய்தியை திரும்பி படிச்ச சிரிப்பாணி பொங்குது
வெளிநாட்டில் இருப்பது போல போதிய வசதிகள் இல்லை. நாங்கள் அந்த சிறைகளில் அடைக்கப்பட்டால் வியாதி வரும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இது நல்ல கதையா இருக்கே சிறை என்றால் அப்படித்தான் இருக்கும். சிறையில் பாகுபாடு பார்ப்பது மிக மிக பெரிய தவறு. சிறை தண்டனை என்று வந்துவிட்டால், சிறையில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக நடத்தப்படவேண்டும். சொல்லப்போனால் விஜய மல்லையா போன்ற மிகப்பெரிய பொருளாதார குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மிக மிக அதிகமாக இருக்கவேண்டும்.
இந்திய குற்றவாளிகள் இந்த சலுகையை கேட்க கூடாதா? இது ஏற்றத்தாழ்வு! சம தர்மம் சமநீதி கொள்கைக்கு எதிரானது!