வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தெரு நாய்கள் = கார்ப்பரேட் முதலாளிகள்= ரேபிஸ் வேக்சின் = பணம் தெரு நாய்க்கு சப்போர்ட் பண்ற குழுக்கள் எல்லாம் இவங்களால ஏற்படுத்தப்பட்டது தான்
தெருநாய்கள் தொல்லை ஓரளவுக்கு குறைந்தாலும், அந்த தெருநாய்களுக்கு ஆதரவாக செயல்படும் அந்த குழுவினரால் இப்பொழுது மக்களுக்கு ரொம்ப தொல்லை, தொல்லையோ தொல்லை.
நாய்கள் ஐயோ பாவம் இல்ல என்ன மாதிரி விலாவாரியாக நாய்களுக்கு வக்காலத்து வாங்குறீங்க தெரு நாய்களை அவ்வப்போது Culling. முறையில் அழிப்பதே நல்லது. சும்மா ஜீவகாருண்யம், மது ஒழிப்பு போன்றவற்றை கூறி ஜல்லியடிக்க வேண்டாம். தினமும் மனிதன் சாப்பிடுவதற்காக லட்சக்கணக்கான ஜீவன்கள் கொல்லப்படுவது பற்றி ஒரு சின்ன இயலாமை வருத்தம் கூட சொல்லாத நாய் பிரியர்கள் ""ரேபீஸ் கடி வியாதியை"" பரிசாக தரும் தெரு நாய்களை கண்டு கொள்ள கூடாது என்று கூறுவது கடைந்தெடுத்த சுயநலம் மற்றும் வியாபார தந்திரம் காட்டு விலங்கினமாக இருக்கும் கட்டுப்படுத்த இயலாத ""தெரு நாய்கள்"" அழித்து ஒழிக்கப்பட வேண்டியவையே. கைவிடப்படும் குழந்தைகளுக்கு இந்த அரசு செய்ய வேண்டியது நிறைய உள்ளது.இந்த தெரு நாய்கள் மனிதனுக்கு ""தேவையற்றது"" இந்தியர்கள் அவற்றை தனிப்பட்ட முறையில் அழிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
இந்த செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கும், செய்தியாளருக்கும் சில கேள்விகள் நீதிமன்றம் ஆக்கபூர்வமான தீர்ப்பு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் இதில் அப்படி என்ன ஆக்கபூர்வம் உள்ளது நாய்க்கடியால் ஒரு வருடத்தில் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன விபத்தால் ஒரு வருடத்தில் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன. இதை ஒப்பீடு செய்யவும் மதுவால் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும் அதனால் அந்த குடும்ப பொருளாதார பாதிப்புகள். சிகரெட்டால் எவ்ளோ பாதிப்புகள் ஏற்படுகின்றன. டெல்லி காற்று மாசு யாரால் ஏற்படுகின்றது. அதனால் ஒட்டுமொத்த ஊரும் பாதிப்பு அடைகின்றது உணவு கலப்படத்தால் எவ்ளோ பாதிப்புகள், அதை அனுமதிக்கும் அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் தெரியாதா. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் யாரால் ஏற்படுகின்றது. சிறுவயதிலேயே இளைஞர்கள் போதையால் அவர்கள் வாழ்க்கை நாசமாகி வருகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நாய்கள் மூலமா ஏற்படுகின்றது உங்களை போன்ற சுயநலமிக்க மனிதர்களால் இந்த உலகம் பல்வேறு வகையில் நாசமாகி வருகின்றது நான் கேட்கின்றேன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பெரிய பிரச்சனை இல்லை. இந்த தெருநாய் தான் மிக பிரச்சனை உங்களை போன்ற ஒழுக்கமான மனிதர்களுக்கு. நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலகம் மனிதனால் தான் மற்ற அனைத்து உயிர்களும் பல்வேறு வகையில் பாதிப்புகள் அடைகிறது. இந்த உலகில் பேராசையுடன் வாழும் ஒரே இனம் என்றால் மனிதன் மட்டுமே நாய் மேல் அன்பு காட்டுவர்களை இந்த சுயநலமிக்க சமுதாயம் குறை கூற என்ன தகுதி உள்ளது. நன்றி இல்லாத மனிதர்களே இந்த உலகை அழிவை நோக்கி கொண்டு செல்வார்கள். இந்த நீதிமன்றம், மருத்துவமனை, காவல்துறை அனைத்தும் ஒழுக்கமற்ற, சுயநலமிக்க மனிதர்களால் தான் இயங்கிக்கொண்டின்றது உங்கள் செய்தித்தாள்களில் பாருங்கள் தினம் எவ்ளோ மரணங்கள், குற்றங்கள் நடக்கிறது. பைரவர் துணை