உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு

மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், வாதங்களை துவக்காததால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தி.மு.க., ஆட்சியில், 1996 -2001ம் ஆண்டுகளில், மருங்காபுரி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாகவும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் செங்குட்டுவன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vp9w7g51&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சி மாற்றத்துக்குப் பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 81 லட்சத்து 42,000 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிமன்றம், அவரது மகன்கள், மகள், சகோதரர் மகளுக்கு தலா, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2023 அக்டோபரில் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர்.இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை துவக்க மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மகன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்தும், அவர்களை கைது செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sesh
ஆக 08, 2025 13:06

பொன்முடிக்கும் இந்த மாதிரி தீர்ப்பு கிடைக்குமா. குற்றவாளி என்று தீர்ப்பு வந்தும் வெளியில் தான் உள்ளார் எப்படி என்றே தெரியவில்லை. கணவன் மற்றும் மனைவி ஜெயிலில் களி தின்னும் நன்னாள் என்று ?


panneer selvam
ஆக 03, 2025 00:36

Kudos to Madras High court single judge verdict , that too after 25 years . For next judgement , we need to wait for next 20 years .By that time all accused will be no more , Even if they alive , move to Supreme court which will give judgement in just 10 years time. The speed of Indian Judiciary is amazing . Talking high morale and preach good to people by sitting on high pedestal but they never look at their face .


ஆரூர் ரங்
ஆக 02, 2025 18:54

பேஜ் 21


M Ramachandran
ஆக 02, 2025 18:01

திருட்டு கட்சியென்பதில் இரண்டும் வேறல்ல ஒன்று தான் என்று நிறைய மாஜிகல் நிரூபித்திருக்கிறார்கள். செந்தில் பாலஜியை கேளுங்கள். பழனியும் விதிவிலக்கல்ல. தேர்தல் முடிந்ததும் காவடி தூக்க போராங்க


M Ramachandran
ஆக 02, 2025 18:01

திருட்டு கட்சியென்பதில் இரண்டும் வேறல்ல ஒன்று தான் என்று நிறைய மாஜிகல் நிரூபித்திருக்கிறார்கள். செந்தில் பாலஜியை கேளுங்கள். பழனியும் விதிவிலக்கல்ல. தேர்தல் முடிந்ததும் காவடி தூக்க போராங்க


Natchimuthu Chithiraisamy
ஆக 02, 2025 17:46

2000 ரூபாய கொஞ்சம் குறைத்து ஆணையிடுங்கள் நீதிமான். கரண்ட் பில் 124 கட்டமுடியாமல் இருக்கிறார்கள்


Mecca Shivan
ஆக 02, 2025 17:06

இப்படி தண்டனை ரத்து என்பது திமுகவினருக்கு மட்டும் எப்படி ?


ஆரூர் ரங்
ஆக 02, 2025 14:36

சுப்ரீம் கோர்ட்க்கு மேல் முறையீடு lக்கு செல்வார்கள். வழக்கு முடிவதற்குள்ளாகவே தங்களுக்கு முதுமை, தள்ளாத வயது எனக் கூறி அனுதாப விடுதலையும் கேட்கலாம். முடிஞ்சது கேசு.


Ramona
ஆக 02, 2025 14:28

அரசியல் வியாதியையும் சிறை தண்டனை கொடுக்க முடியும் என்றால் பாராட்ட பட வேண்டியதுதான்.


சமீபத்திய செய்தி