| ADDED : மே 19, 2025 04:30 AM
பீஹாரில் மதுவிலக்கு ஏற்படுத்தப்பட்ட பின், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. அங்கும் கள்ளச்சாராய பலி உண்டு. ஆனால் பீஹார் அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்துவிட்டது.இழப்பீடு கொடுத்தால், கள்ளச்சாராயத்தை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்று விளக்கம் அளித்தது. ஆனால், தமிழகத்திலும் கள்ளச்சாராய பலி நடந்தது. இங்குள்ள அரசு விரைந்து சென்று, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு தருகிறது. கள் விற்பனை மற்றும் கவன ஈர்ப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. அதற்கு பீஹார் முதல்வரை அழைக்கிறோம். வரும் 2026 சட்டசபை தேர்தலை கள் நிர்ணயிக்கும். தாய்ப்பாலுக்கு நிகரானது கள். திருச்சியில் நடைபெறும் கவன ஈர்ப்பு மாநாட்டிற்கான பிரசார வாகனம், ஒவ்வொரு ஊருக்கும் செல்லும். அது, கள்ளுக்கு தடையை நீக்க வலியுறுத்தி பரப்புரை செய்யும்.நல்லசாமி, கள் இயக்க தலைவர்