வாசகர்கள் கருத்துகள் ( 4 )
டக்கு முக்கு தாளம். திராவிட கும்பலால் நாறிய அரசியல். ஆரம்பித்த தலைகளெ சரி இல்லை. மணியம்மையை யால் ஒரு கட்சி உதயம். அவர்களின் சட்ட சபை நாகரிக பேச்சுக்கள். நாதம் பிடித்த கும்பலின் உறைகள் மக்களின் புத்தி பேதலித்து திருடர் கூட்டத்தை தவறான இடத்தில் உட்கார வைத்தகு அழகு பாரதத்தின் விளைய்வு வரி பணம் கொள்ளைய போய் கொண்டிருக்கு.
தேர்தல் கமிஷனுக்கு என தனியாக எந்த ஒரு அலுவலரும் மாநில முதன்மை தேர்தல் அலுவலரை தவிர கிடையாது. தேர்தல் தொடர்பான எந்த பணியாக இருந்தாலும்- வாக்காளர் பெயர் சேர்க்க கணக்கெடுப்பு செய்தல், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், தேர்தல் நடத்துதல் இவை எல்லாவற்றையும் அந்தந்த மாநில ஊழியர்கள் தான் செய்கிறார்கள். மாநிலத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கு / கட்சிக்கு தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை. வாக்காளர் கணக்கு எடுக்கும் பணியில் ஆளும் கட்சிக்கு பாதகமாக நடந்து கொண்டால் தங்கள் நிலை என்ன ஆகும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரியாதா. 2002 - 2004 ஆண்டுக்கு பின்பு வெளியான வாக்காளர் பட்டியலில் இருக்கும் தனது பெயரை மீளவும் பட்டியலில் தக்க வைத்துக் கொள்ள ஒருவர் அளிக்க வேண்டிய ஆதாரங்கள் கேட்டால் அது தவறா? அது தவறு என்றால், ஏற்கனவே 2002-2004 க்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் எந்த ஆதார அடிப்படையும் இல்லாமல் பெயர் சேர்க்க மாநில அரசு ஊழியர்கள் அவர்கள் தானே கணக்கு எடுத்தார்கள் பரிந்துரைத்தார்களா? 2002- 2004 ன் போது நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது கேட்கப்பட்ட அதே ஆதாரங்களை மட்டுமே கேட்க வேண்டும் என்றால் தற்போது உள்ள பட்டியலில் காணும் குறைகளை களைய வேறு கூடுதல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்பது தவறா? நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப சட்ட விதி முறைகள் / வழிகாட்டுதல்கள் வகுக்கப்பதில்லையா? ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகியவை , அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அப்போதும் கூட அளிக்கப்படும் விண்ணப்பங்கள், வீடு தோறும் சென்று சரி பார்க்கப்பட்ட பிறகு தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்ட துவக்கத்திலும், மழை காலம், பண்டிகை காலம் ஆகியவை வந்து கொண்டு தானே இருந்தன. அது மட்டும் இல்லாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கூட வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணி நடை பெற்று வாக்கு சாவடிக்கு அந்த பட்டியலும் தானே வாக்கு பதிவின் போது அனுப்பப்படுகிறன்றன. அப்போது எல்லாம் எழுப்பாத அரை கூவல் இப்போது மட்டும் ஏன்?
பீகார் மாதிரி தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையம் தில்லு முள்ளு நடக்காது தமிழக குறிபாக தென் இந்தியா மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர் புதுசாக வெளி மாநிலத்தவர்களை சேர்க்கும் பொழுது ஆவணங்கள் சரி பார்க்க வேண்டும் .
கள்ள ஓட்டு போடுவதற்கு எந்தெந்த வீடுகளில் வாய்ப்பு உள்ளது என்று திமுகவினர் கணக்கு எடுப்பதற்கு அதீத ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் எதிர் கட்சி ஆட்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நோட்டம் இடுகின்றனர். ஆபீஸ் சென்று வாக்காளர் பெயர்களை நீக்கி விடுவார்கள். அதிக திமுகவினர் வருவதற்கு அதுதான் காரணம்.