உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உண்மையான கள நிலவரம் தெரியாமல் ஆளுங்கட்சி மேலிடம் தவிப்பு

உண்மையான கள நிலவரம் தெரியாமல் ஆளுங்கட்சி மேலிடம் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இரு மாதங்களே உள்ள நிலையில் மக்களின் மனநிலை, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து, உளவுத் துறையிடம் இருந்து உண்மையான தகவல்கள் கிடைக்காததால் தி.மு.க., மேலிடம் குழப்பம் அடைந்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என தி.மு.க., தலைமை கூறி வருகிறது. இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மக்களின் மனநிலை, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகள், ஆதரவு நிலை, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட தகவல்களை, உளவுத்துறை வாயிலாக பெற முடிவெடுத்து, அத்துறை அதிகாரிகளிடம் தகவல்களை சேகரித்து தருமாறு கோரி உள்ளது, ஆட்சி மேலிடம். இதற்காகவே, பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த தகவல்கள் ஆளும் தரப்பின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருப்பதால், அதை அளிக்க உளவுத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். கூடவே, தென் சென்னையில் இரண்டு, வட சென்னையில் ஒன்று, காஞ்சிபுரத்தில் இரண்டு தொகுதிகள் உட்பட தமிழகம் முழுதும் 75 இடங்களில் தி.மு.க., பலவீனமாக இருக்கும் தகவலையும் கண்டறிந்திருக்கும் உளவுத்துறை அதிகாரிகள், அதையும் ஆட்சி மேலிடத்துக்கு தெரிவிக்காமல் உள்ளனர். உளவுத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கும் ஆட்சி மேலிடத்தில் இருப்போர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்தும் ஆய்வு நிறுவனம் வாயிலாகவும் கள நிலவரங்களை சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் எப்படி உள்ளன; யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என தகவல் கேட்டுள்ளனர். ஆய்வு நிறுவனத்தாரும் கள நிலவரங்களைக் கொண்டு அறிக்கை அளிப்பதாகக் கூறியுள்ளனர். நிறுவனத்தில் பணியிலிருப்போர் சிலர், தாங்கள் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், பரிசுகளை அள்ளிக் கொடுத்தோருக்கும் சாதகமான அறிக்கையை, தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளனர். இது, கட்சி நிர்வாகிகள் சிலர் வாயிலாக தி.மு.க., தலைமைக்குத் தெரியவர, இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்ட நிறுவன ஊழியர்கள் பலரையும் வேலை நீக்கம் செய்துள்ளனர். உளவுத்துறை அறிக்கையும் சரிவர கிடைக்காததோடு, சபரீசன் நிறுவனத்தின் அறிக்கையும் தவறுதலாக அளிக்கப்பட்டதால், உண்மையான கள நிலவரம் அறிய முடியாமல் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, தி.மு.க., தலைமை. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Rajamani Ksheeravarneswaran
ஜன 24, 2026 22:29

ஓடி வந்த ஒரு குடும்பம் திருட்டு ரயிலில் பயணம் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து கொண்டிருக்கிறது .ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த திருட்டு முரட்டு குடும்ப மாஃபியாவிற்கு இன்னும் முட்டுக்கொடுக்கும் மங்கிகள் டாஸ்மாக்ல சுருண்டு கிடப்பவர்கள் கொடுக்கும் ரூ 200 பிரியாணி குவாட்டருக்கு வாக்களிக்கும் திமுக சொம்புகள் இனியாவது திருந்த வேண்டும். பெருந்தலைவர் காமராஜ் , அறிஞர் அண்ணா , புரட்சி தலைவர் , புரட்சி தலைவி தன் குடும்பத்தினரை அரசியலுக்கு அழைத்து வரவில்லை .கட்சியிலும் சேர்க்க வில்லை .ஊழலில் திளைத்து நிற்கும் இந்த திருட்டு குடும்ப மாஃபியா கும்பல் மீது இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்கும் மத்திய பாஜக அரசு இப்போதாவது இவர்களை திகாருக்கு அனுப்ப வேண்டும் அதுதான் அவர்கள் உண்மையில் தமிழகத்திற்கு செய்யும் நன்மை


Ravi Kulasekaran
ஜன 24, 2026 10:03

சங்கு தான் ஊஊஊஊஊஊ


Anantharaman Srinivasan
ஜன 23, 2026 23:31

வரும் சட்டசபை தேர்தல் 1967ல் நடந்த புரட்சிபோல நடக்க வாய்புள்ளது.


எஸ் எஸ்
ஜன 23, 2026 19:51

எதிர்ப்பு இருப்பது எல்லோருக்கும் கண் கூடாக தெரிகிறது.


Rajasekaran
ஜன 23, 2026 18:12

அப்படியென்றால் CBI, ED, INCOMETAX இதெல்லாம் சும்மா விளையாடவா மத்திய அரசு வைத்துள்ளது. மத்திய உளவு துறை என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது. எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் ஆணி பிடுங்கி வேலையா செய்கிறார்கள்?


அருண் பிரகாஷ் மதுரை
ஜன 23, 2026 17:43

திமுகவிற்கு ஓட்டளிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.. அது தெரிந்து தான் 1000 ரூபாய் விரிவாக்கம்,லேப்டாப், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் புதிய ஓய்வு திட்டம் என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் இன்றுவரை சாமானிய மக்களின் மனதில் எந்தவொரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை.. திமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்க மக்கள் விரும்பவில்லை.. திமுக கட்சிகாரர்களுக்கும் அமைச்சர் எம் எல் ஏக்களுக்கும் உண்மை தெரியும்..அதுதான் கள நிலவரம்..


முருகன்
ஜன 23, 2026 17:14

இப்படி எழுதினால் தான் ஒரு சில இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியும்


DR T JAYAKUMAR
ஜன 23, 2026 16:02

இந்த தேர்தலில்...பாஜக அதன் கூட்டணி கட்சிகள் தோற்கவேண்டியது..இன்றி அமையாதது. எது நடந்தாலும்...திமுக வெற்றி பெறும்


R.MURALIKRISHNAN
ஜன 23, 2026 16:32

திமுக என்ற திராவிட கும்பலை விரட்டியடித்து தமிழ்நாட்டை மலர செய்யவேண்டியது தமிழனின் கடமை. எனவே வரும் தேர்தலில் திராவிட களவாணிகளை கண்டிப்பாக தோற்கடிப்போம்..என மக்கள்


Against traitors
ஜன 23, 2026 17:49

கதறு நைனா


DR T JAYAKUMAR
ஜன 23, 2026 15:59

தமிழ்நாட்டில்... பாஜக இருக்கும்வரை...திமுக எப்படியும் வெற்றி பெறும்.


mindum vasantham
ஜன 23, 2026 15:20

விஜய்யம் கூட்டணியில் இணைந்தால் ஆட்சி கருமாதி தான்


புதிய வீடியோ