உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாணவி விவகாரத்தில் ஆதாய அரசியல்; பிளேட்டை திருப்பிப்போட்ட திருமா

மாணவி விவகாரத்தில் ஆதாய அரசியல்; பிளேட்டை திருப்பிப்போட்ட திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.'பாலியல் புகார் விவகாரத்தில், அரசு தரப்பில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என முதன் முதலில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய திருமாவளவன், 'இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன், பாதிக்கப்பட்ட மாணவி முன் போனில் பேசும்போது, சார் என குறிப்பட்டது எந்த சாரை?' எனக் கேட்டும் பிரச்னையை கிளப்பி இருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் போராடும் எதிர்கட்சியினர் ஆதாய அரசியல் செய்வதாக, திடுமென பிளேட்டை திருமா மாற்றிப் போடுகிறார்.

உணர்வுகளை மதித்து

முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசிய பின், திருமாவளவன் அளித்த பேட்டி:வி.சி., பொதுச்செயலர் எழுத்தாளர் ரவிகுமாருக்கு இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் விருதை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.தமிழகத்தின் உணர்வு களை மதித்து, கவர்னர் நடந்து கொள்ள வேண்டும்.தமிழக சட்டசபையில் தேசிய கீதமும், அரசியலமைப்பு சட்டமும் அவமதிக்கப்பட்டு விட்டதாக கவர்னர் ரவி அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்படியொரு உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டிய தேவை இல்லை.கவர்னரின் போக்கு, சட்டசபை மரபுகளை அவமதிக்கும் செயலாக உள்ளது. சராசரி அரசியல்வாதியை போல செயல்படும் கவர்னர் ரவியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

அரசியல் நாகரிகம்

இது, பாதிக்கப்பட்ட மாணவிக்கே எதிரானது. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன் பின்னும், தமிழக அரசு மீது திரும்ப திரும்ப குற்றம் சுமத்துவது, எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதாய நோக்கத்தையே காட்டுகிறது. ஆளும் கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி, எதிர்க்கட்சியைப்போல செயல்பட முடியாது; தோழமை கட்சியாகத்தான் செயல்பட முடியும். அதுதான் அரசியல் நாகரிகம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

V வைகுண்டேஸ்வரன், chennai
ஜன 07, 2025 22:54

ஏன் இங்கே எல்லாரும் வாழும் அம்பேத்கார் அண்ணல் திரு திரு மா பற்றி குறைத்து மதிப்பீட்டு செய்வது நன்றாக இ‌ல்லை...அவர் அவரது பணியை அவருக்கு இடப்பட்ட கட்டளைக்கு கட்டுப்பட்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதை போய்....


ரமேஷ்
ஜன 07, 2025 20:10

வளவா, திருப்பிபோடு, உன் அருவாளை


Haja Kuthubdeen
ஜன 07, 2025 19:55

அஇஅதிமுக இவரையெல்லாம் நம்பவும் கூடாது..திமுக இவரை விரட்டி விட்டாலும் எடப்பாடி கூட்டணியில் சேர்க்கவும் கூடாது...பாமக வுடன் கூட்டணி அமைப்பதே மேல்...


theruvasagan
ஜன 07, 2025 15:42

ஹலோ. எசமான் ஐயாவா. கும்புடுறேனுங்க ஐயா. கூலி பணம் கைக்கு வராத காரணத்தால லைட்டா காண்டு ஆகி நேத்திக்கு கொஞ்சம் எக்குதப்பா பேசிட்டேனுங்ககய்யா. அப்புறம் பாக்குறேன். பணம் என்னோடு அக்கவுண்டுல வந்த சேர்ந்துடுச்சுன்னு தெரிஞ்சுது. உடனே அப்படியே இன்னிக்கு பிளேட்டை திருப்பி போட்டுட்டேனனுங்கய்யா. மனசுல எதுவும் வச்சுக்காதீங்கய்யா. உங்களுக்கு வாழ்நாள் கொத்தடிமையா இருப்பேன்னு நான் எழுதிக்கொடுத்த உறுதி பத்திரத்தை மறந்துடாதிங்கய்யா. நீங்க போட்டதை தின்னுட்டு ஆயுசு பூரா உங்க காலடியிலேயே கிடப்பேன் என்பதில் உங்களுக்கு எள்ளளவு கூட சந்தேகம் வேண்டாம்


vijai
ஜன 07, 2025 15:11

என்ன பண்றது இந்த ஆளுக்கு பிளாஸ்டிக் சேர் பெட்டி கிடைக்காது ஒரு பயம் இந்த ஆளை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் இப்பவாவது உணர்வார்களா நிறம் மாறும் பச்சோந்தி


krishna
ஜன 07, 2025 14:59

IDHELLAM ORU KATCHI.IDHUKKU IPPADI PATTA MIGA PERIYA KOZHAI THALAIVAR.KEDU KETTA VEKKAM ILLADHA THONDARGAL VERU ARIVAALAYAM KOTHADIMAI SUMMA ODHAAR KAATAAMA IRUNDHA NALLADHU.


Ganapathy Subramanian
ஜன 07, 2025 14:49

இவரையெல்லாம் ஜெயிக்க வைத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்களே, அவர்களை சொல்லவேண்டும். இவரை ஜெயிக்க வைக்க ஓட்டை விற்றதற்கு சிதம்பரம் தொகுதியின் வாக்காளர்கள் ... எடுக்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 07, 2025 14:46

இவரும் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை போன்றவர்கள் எல்லோரும் திமுக சொல்வதைத்தான் கேட்டு அதுபோலவே நடப்பவர்கள். திமுக தனது அரசு மீது எதேனும் இது போன்ற விவகாரம் வரும் பொழுது அதனை திசை திருப்ப தனது தோழமை கட்சிகளை பயன்படுத்தி கொள்கிறது. ஏனெனில் பத்திரிகைகளும் ஊடகங்களுக்கும் தீனி போட்டால் தானே விவகாரங்களை திசை மாற்றி மக்களையும் ஊடகங்களையும் மறக்கடிக்க செய்ய முடியும். திரு.திருமாவளவன் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் எல்லாம் திமுகவின் கிளை கட்சிகளே. தொழிலில் போட்டியாளர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக தொழில் செய்பவர்கள் வேறு பெயர்களில் அருகிலேயே மற்றொரு நிறுவனங்கள் ஆரம்பித்து அங்கு செல்லாமல் தங்களுக்கு மிகவும் நம்பகமான பினாமிகள் கொண்டு நடத்துவார்கள். அது மாதிரியான ஏகபோக தொழில் நிறுவனம் திமுக. விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்றவை அதன் பினாமி நிறுவனங்கள். மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கமல்ஹாசன் கொண்டு ஒரு நிறுவனம் தொடங்கி அதன் வேலை முடிந்ததும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அடுத்து புதியதாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கொண்டு ஆரம்பித்து உள்ளது திமுக மக்கள் நீதி மையம் மாற்றாக. அடுத்த சட்டசபை தேர்தல் அதற்கடுத்த பாராளுமன்ற தேர்தல் அடுத்து தவெகாவும் திமுகவுடன் இணைந்து கொள்ளும். அதன் அதன் தலைவர்கள் மீண்டும் சினிமா நோக்கி சென்று விடுவார்கள். இந்த திட்டம் வெற்றியானால் அடுத்து சினிமா நடிகர் சிவகுமார் மகன் சூர்யா அல்லது நடிகர் சிவகார்த்திகேயன் அல்லது விஷால் கொண்டு புதிய கட்சி உருவாக்கும். என்றுமே தன்னுடைய கிளை கட்சி தான் நாம் தமிழர் கட்சி என்று காட்டி கொள்ளாமல் நிரந்தரமாக வைத்து முக்கிய தொகுதிகளில் ஓட்டுகளை பிரிக்க வைத்து கொண்டு உள்ளது. அதற்காக தான் திரு.சீமான் என்ன பேசினாலும் கண்டும் காணாதது போல் திமுக உள்ளது. ஆகவே இந்த எழுதப்படாத திமுக கிளை கட்சிகளை நம்பி மற்ற கட்சிகள் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். திமுக இவர்களுக்கு தெளி தேனும் பாலும் பழமும் கொடுத்து வளர்த்துக் கொண்டு உள்ளது. அடியே விழுந்தாலும் அம்மா என்று கத்தாமல் திமுக என்று பத்தியே உயிரை விடுவார்கள் இவர்கள்.


SELLIAH Ravichandran
ஜன 07, 2025 13:37

Watermelon in drinking water how comes your political.students problem you think take it easyly.


அரவழகன்
ஜன 07, 2025 13:16

வி.சி.க. திருமா என்றாலே பச்சோந்தி தான் நினைவுக்கு வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை