உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்கள் வரிப்பணத்தை சூறையாடியவர்களுக்கு மத்திய அரசை குறை கூற தகுதியில்லை: முருகன்

மக்கள் வரிப்பணத்தை சூறையாடியவர்களுக்கு மத்திய அரசை குறை கூற தகுதியில்லை: முருகன்

சென்னை: 'தி.மு.க.,வினரின் போலி நாடகங்களை, தமிழக மக்கள் நம்ப போவதில்லை; மக்கள் வரிப்பணத்தை சூறையாடிய வர்களுக்கு, மத்திய அரசை குறை சொல்ல தகுதியில்லை' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், நாளை நடக்க உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், தன் கட்சி எம்.பி.,க்களை கூட்டி, 11 ஆண்டுகளாக, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக, வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி, தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.

சுருட்டல்

டில்லியில், கடந்த மே மாதம் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாக, ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தை காட்டியே, பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர். ஆண்டுகள் பல கடந்தும், தமிழக மக்களுக்கு நாற்றமடிக்கும் கூவம் ஆறு தான் மிச்சம். கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியவர்கள், இன்று வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி, அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட முடியுமா என்று அலைகின்றனர். ஒவ்வொரு பிரச்னையிலும், 'மத்திய அரசிடம் கேட்டு விட்டோம், செய்யவில்லை' என்று பழி போட்டு தப்பிக்கலாம் என, ஸ்டாலின் எண்ணுகிறார். ஆனால், தமிழக மக்கள், அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான். 'தமிழகத்தை ஆட்சி செய்ய தி.மு.க.,வை, தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது எதனால்; எதுவும் செய்ய முடியாத நீங்கள் தேர்தலில் நிற்பது எதற்காக; வெற்றி பெறுவது எதற்காக; ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவா?

அதிக நிதி

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று, வழக்கம்போல் தீர்மானம் கொண்டு வந்துள்ள நீங்கள், 'எந்த நிதி தரவில்லை என கூறுங்கள்' என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமுறை கேள்வி கேட்டு விட்டார்; பதில் இல்லை. பிரதமர் மோடி அரசு, தமிழகத்திற்கு, 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. ஆனால், 2004 முதல் 2014 வரை தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு செய்தது என்ன; தி.மு.க.,வுக்கு அதை கூற திராணி இருக்கிறதா?அதுமட்டும் அல்லாமல், தற்போது மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசு பெற்ற, 11 லட்சம் கோடி ரூபாயில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?தி.மு.க.,வினரின் போலி நாடகங்களை, தமிழக மக்கள் நம்ப போவதில்லை. இந்த கொடூர ஆட்சியில், மக்கள் படும் துயரம் ஒன்றல்ல, இரண்டல்ல. மக்களை சுரண்டி கொள்ளையடித்து, தி.மு.க., குடும்பம் மட்டுமே குதுாகலமாக வாழும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகி விட்டார்கள். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

xyzabc
ஜூலை 20, 2025 15:58

ரூ 200க்கு மேற்பட்ட கருத்து. சூறையாடுவது மாடல் ஆட்சியின் பொழுதுபோக்கு.


T.sthivinayagam
ஜூலை 20, 2025 15:33

தமிக ஜிஸ்டி பணம் உபி, குஜராத்திலும் குவிக்கபடுதே இது முருகன் ஜிக்கு தெரியுமா என மக்கள் கேட்கிறார்கள்


N Sasikumar Yadhav
ஜூலை 20, 2025 18:02

உங்க கோபாலபுர எஜமானை மத்தியரசு கொடுத்த நிதியை பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்க சொல்லுங்க . உங்க கோபாலபுர எஜமான் ஒட்டிய ஸ்டிக்கரெல்லாம் மத்தியரசு திட்டங்கள்மீது . தமிழக திராவிட மாடல் அரசு ஆட்டய போட கடனை வாங்கியது


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 19:48

குஜரா‌த் Per Capita ஜிஎஸ்டி வசூல் நம்மைவிட மிக மிக அதிகம் . ஆனால் நம்முடைய ஜிஎஸ்டி வசூல் மக்கள் தொகை சதவீதம் இரண்டும் ஒன்றுதான். முன்னேறிய மாநிலம் என்பது டூப்.


N Sasikumar Yadhav
ஜூலை 20, 2025 14:28

பேசி பழகிய பொய் வாங்கி பழகிய கை போட்டு பழகிய பை இதுதான் திருட்டு திமுக


Ramalingam Shanmugam
ஜூலை 20, 2025 10:34

நீங்க என்ன சாதிச்சிங்க சார் அமைச்சரா இருந்து


Oviya Vijay
ஜூலை 20, 2025 09:37

தமிழக மக்கள் பாஜகவினரை ஒன்றும் உத்தமர்கள் என்று என்றைக்குமே நினைத்ததில்லை... உத்தமர்களாக மக்கள் நினைக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொண்டதில்லை... பாஜகவினர் செய்யும் பலவிதமான அராஜகங்களும் மீடியா மூலமாக மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பாஜக என்றவுடன் மக்கள் மனதில் தோன்றுவது இவர்கள் கலகக்காரர்கள்.. நாட்டில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள்.. நாட்டில் வேற்று மதத்தவரை சீண்டிக் கொண்டு மதச்சண்டைகள் மூலமாக குளிர் காய்பவர்கள் என்பன போன்றவைகளேயாகும்... பாஜக கட்சியின் நிர்வாகிகளாக தங்களை வெளியிலகிற்குக் காட்டிக் கொள்பவர்கள் பேசாமல் வேறொரு கட்சிகளுக்கு மாறிச் சென்று விடலாம். எல் போர்டு முருகனைப் போல் புறவாசல் வழியே பதவி பெறும் அதிர்ஷ்டம் அனைத்து நிர்வாகிகளுக்கும் கிடைக்கும் என்பது உறுதி இல்லையே. மாற்று கட்சிகளுக்கு சென்றாலாவது ஏதாவது பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது...


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஜூலை 20, 2025 13:15

உன்னைப் போன்ற திருட்டு திராவிடர்கள் தான் இதைப் போன்ற பொய் செய்திகளை பரப்ப முடியும். மற்ற மாநிலங்களில் பாஜகவை யாரும் அப்படி ஒன்றும் சொல்வதில்லை. எனவே சிறிது அமிக்கி வாசிக்கவும்.


Kjp
ஜூலை 20, 2025 20:59

நண்பர் சத்தியம் டிவி கருத்து கணிப்பை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தொகுதி வித்தியாசம் அதிகம் இல்லை.எவ்வளவு செல்வாக்கு திமுகவுக்கு சரிந்துள்ளது.அதிமுகவுடன்இன்னும் ஒரு கட்சி சேர்ந்தால் திமுக ஆட்சியை இழக்கும்.சும்மா முருகனை விமர்சிக்காமல் அவர் கேட்ட கேள்விக்கு பதில் பதிவிடுங்கள்.


அப்பாவி
ஜூலை 20, 2025 09:12

இங்கே அனைச்சர்கள் சூறையாடினால், அங்கே கார்பரேட்கள் சூறையாடி பா.ஜ வுக்கு குடுக்குறார்கள்.


N Sasikumar Yadhav
ஜூலை 20, 2025 14:30

உங்க திராவிட மாடல் கலாநிதி தயாநிதி அவர்களின் சர்வதேச அளவில் பரந்து விரிந்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றியும் பேசுங்க


Subburamu Krishnasamy
ஜூலை 20, 2025 08:47

Mere political statements are of no use. Central government is investigation agencies, bring the looters before the law. Raids are many, but what use. So for how many looters are behind the bars. Political dadas are not at all afraid of law enforcing authorities. Even if they enter the jail, leading a quality jail life and easily getting bails. Jail birds are recognised as holy peoples in the party.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 05:45

திடீரென கருநாடக , தமிழ்நாடு எல்லாம் 5 லட்சம் கோடி , பத்து லட்சம் கோடி என்று கடனை அதிகரித்து கொண்டே சென்றுள்ளனர் , வளர்ச்சி பணி, சாலைகள் தரம் எல்லாம் மோசமடைந்து தான் உள்ளது , இந்த லட்சம் கோடிகள் எல்லாம் யார் பாக்கெட்டுக்கு சென்றது என்று பொதுமக்கள் கேள்வி கேட்பார்களா ?


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 07:47

இந்த ஆளை மத்திய அமைச்சராக ஆக்கியதற்கு பதில் ஒரு அம்மிக் கல்லையோ அல்லது ஆட்டுக் கல்லையோ அமைச்சராக்கியிருக்கலாம். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்த வேலையும் செய்யாமல் நம் வரிப்பணத்தில் தண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பவர் இந்த எல்.முருகன் இனிமேலாவது இவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு இவருக்கு பதில் நன்றாக செயல்படும் இவரது சமூகத்தை சேர்ந்த வேறு யாருக்காவது அமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை