உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிரிவல பாதையில் ஆய்வு மட்டுமே செய்தார் உதயநிதி!

கிரிவல பாதையில் ஆய்வு மட்டுமே செய்தார் உதயநிதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெற உள்ள கார்த்திகை தீப திருவிழா ஆலோனை கூட்டம் நேற்று இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி வருகை தந்தார்.இதற்காக, முன் கூட்டியே திருவண்ணாமலைக்கு வந்த உதயநிதி, திருவண்ணாமலை நகரினுள் வடக்கு மாட வீதியான பெரிய தெரு, மேற்கு கோபுர தெரு, வழியாக, திருவண்ணாமலை - பெங்களூரு இணைப்பு சாலைக்கு வந்தார். அறநிலையத் துறை சார்பில் கிரிவலப் பாதையில் அருணகிரி நாதர் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நுழைவு வாயில், சுற்றுச்சுவர், நடை பாதை உள்ளிட்ட, 36.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மலையையே பக்தர்கள் சிவனாக நினைத்து, 14 கி.மீ துாரம் வலம் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதில், 12 கி.மீ., துாரத்தை போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்படும் இடங்களை, தன்னுடைய காரிலேயே வலம் வந்து ஆய்வு செய்தார் உதயநிதி. கிரிவலப் பாதையின் சில இடங்களில் காரை விட்டு இறங்கி, நடந்து சென்றும் மக்கள் நலப் பணிகளை ஆய்வு செய்தார்.

வேண்டுதலுக்காக வலம் வந்தாரா?

புரட்டாசி மாத பவுர்ணமி திதி, கடந்த 16ம் தேதி இரவு 7:55 முதல், 17 மாலை 5:25 வரை இருந்தது. பின், 5:26 முதல் பிரதமை திதி தொடங்கி, நேற்று, மாலை, 3:16 மணி வரை நீடித்தது. பிரதமை திதியில் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்த உதயநிதி மாலை, 5:00 மணி அளவில், திருவண்ணாமலை எல்லையான கீழ்பென்னாத்துாருக்கு வருகை தந்து, ஆய்வுக்காக கிரிவலப் பாதையை வலம் வந்தார். ஏதோ வேண்டுதல் அடிப்படையிலேயே அவர், இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கக் கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

sankar
அக் 25, 2024 09:22

கிரிவல பாதையில் ஆய்வு - துணை முதல்வர் செய்தார் - சேகர்பாபுவுக்கு கோமாவா ?


K V Ramadoss
அக் 21, 2024 18:09

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் ப்ருகதீஸ்வரர் கோவிலிலேயே இநத வசதிகள் போதுமானதாக இல்லை


muthu
அக் 20, 2024 20:43

In tamilnadu all temples should have facilities like public toilet bath room drinking water facility rest room for tourist coming from far away places Let the govt fulfill this through panchyat union by alloting sufficient money to panchayat


V GOPALAN
அக் 20, 2024 18:54

உதவாகரை உதயயா


sugumar s
அக் 20, 2024 16:56

விடுங்கப்பா . ஜோசியர் சொன்னார். நாங்கல்லாம் வீட்டுலதான் ஆன்மிகம் பண்ணுவோம் தெரியாம ஒரு தடவை வெளியில் நடந்துடுச்சு . மன்னிப்போம் மறப்போம். நாளைக்கு பகுத்தறிவு சங்கத்தில் உரை உள்ளது. எல்லோரும் வாங்க


kulandai kannan
அக் 19, 2024 21:43

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?


D.Ambujavalli
அக் 19, 2024 18:36

இவர் தாத்தா கோபாலபுரம் கிருஷ்ணன் கோயில் அருகில் வரும்போது மேல்துண்டை போட்டுவிட்டு குனிந்துஎடுப்பதுபோல் ஜாடையாக வணங்குவார் பேரன் போலி கிரி வலம் நாடகம் எதிலும் இரட்டை வேஷம் பரம்பரை குணம் ஆயிற்றே


இறைவி
அக் 19, 2024 17:11

அண்ணாமலையார் தூய மனதுடனும் நிறைந்த பக்தியுடனும் வருபவர்களை என்றுமே கை விடுவதில்லை. அவர்களின் வழிபாட்டில் அறியாது தவறு செய்தாலும் மன்னித்து ஆசீர்வாதம் செய்வார். ஆனால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி நடிப்பர்வர்களை அவன் நன்கு அறிவான். நிச்சயம் உண்மையற்ற பக்திக்கு, நாடகத்திற்கு உண்டான ஆசீர்வாதம் கிடைக்கும்.


Bala
அக் 19, 2024 17:04

தைரியமா வேண்டுதலை கூட நிறைவேற்ற முடியாத மனிதர். ஆனா அல்லோலியா வெளிப்படையாக சொல்வார். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம். இதுதான் இவர்களின் பகுத்தறிவு.


ponssasi
அக் 19, 2024 14:57

நான் கடந்தவாரம் வேளாண்துறை சார்ந்த உயர் அதிகாரியை சந்திக்க நேர்ந்தது, அவர் சொன்னது அடுத்தவாரம் டெபுடி CM வராரு. எத்தனைபேரு தல உருளப்போதோ தெரியல. இவர் ஆய்வுன்னு போற மாவட்டத்துல யாராவது பொய் சொல்லி சஸ்பென்ஷன் ஆகுறாங்கு சார். இவர் சென்னையில் இருக்கும்போதே மனுதாரருக்கு போன் செய்து உங்க மனுமீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாரா என தெரிந்துகொள்கிறார். நடவடிக்கை எடுக்காத மனுவை குறித்துக்கொண்டு ஆய்வு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து மனுவின் நிலை பற்றி கேட்கிறார், அதிகாரி வழக்கம்போல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தவுடன் அந்த இடத்தில இருந்தே மனுதாரருக்கு போன் போட்டு ஓபன் மைக்கில் விசாரிக்கிறார் வழக்கம்போல அவர் நடவடிக்கை இல்லை என் குமுற உடனடியாக அதிகாரிக்கு மெமோ தரப்படுகிறது, துணை முதல்வருக்கு தவறான தகவல் தந்தமைக்காக காத்திருப்போர் பட்டியலில் அல்லது பணிநீக்ககம் செய்யப்படுகிறார். ஆக உதயநிதி சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.


krishna
அக் 19, 2024 16:09

AAHA 200 ROOVAA COOLIKKU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI PONSASI ENNAMAA URUTRAARU.OOH URUTUVADHU EKKAR KANAKKIL OOYYA SOLLUVADHUDHAAN 200 ROOVAA OOPIS BOY CLUB THOZHIL.


ஆரூர் ரங்
அக் 19, 2024 16:31

அப்படியே அந்த கூவம் மணக்க வைக்கும் திட்டத்தையும் கவனிக்கணும். அவங்க அப்பா கூவத்தில் படகே ஓட்டினார். இவர் கட்டுமரம் ஓட்டுமளவுக்காவது சுத்தம் செய்வாரா?


எஸ் எஸ்
அக் 19, 2024 17:20

இந்த பாராட்டு பத்திரத்தை திமுக வினரே நம்ப மாட்டார்கள். ??


sridhar
அக் 21, 2024 06:07

இப்படி ஒரு அடிமையா .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை