உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரும் தேர்தலில் விஜய் கிங் மேக்கர் : திட்டமிட்ட செயல்பாட்டால் தொண்டர்கள் உற்சாகம்

வரும் தேர்தலில் விஜய் கிங் மேக்கர் : திட்டமிட்ட செயல்பாட்டால் தொண்டர்கள் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அரசியல் பயணத்தின் முக்கிய கட்டமாக, கோவையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடத்திய பின், த.வெ.க., மீது பல அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது. மக்களின், 'பல்ஸ்' அறிந்து கொள்ளும் ஓட்டுச்சாவடி முகவர்களின் பணி, அக்கட்சியில் வேகமெடுத்துள்ளது.த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் வழிகாட்டுதல் படி, ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு, கோவையில் சமீபத்தில் நடந்தது.

முக்கிய அம்சம்

கருத்தரங்கில் பங்கேற்க வந்த கட்சியினரைப் பார்த்து, விஜயை எதிரியாக பார்க்கும் அரசியல் தலைவர்களும் கிலி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.கருத்தரங்கு தவிர, கோவை, மதுரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் தரப்பில் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதான பல கட்சிகளே, ஓட்டுச்சாவடி முகவர்கள் விஷயத்தில் திணறும் நிலையில், இதை பலப்படுத்தினால் மட்டும் கட்சிக்கு எதிர்காலம் உருவாகும் என்று ஆதவ் அர்ஜுனா கொடுத்த ஐடியா, கட்சியை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.ஓட்டுச்சாவடி முகவர்கள் தான், வார்டு வாரியாக சென்று, யார், யாருக்கு ஓட்டுப்பதிவு செய்தனர்; இனி யாருக்கு ஓட்டுப்பதிவு செய்யப்போகின்றனர், மக்களின் மனநிலை என்ன என்றெல்லாம் அறிந்து கொள்வர். கட்சியில், இவர்களின் பணி மிக முக்கியமானது.கோவையில் நடந்த கருத்தரங்குக்கு பின், ஓட்டுச்சாவடி முகவர்கள் த.வெ.க.,வில் வேகமாக களமிறங்கி விட்டனர்.இதனால், த.வெ.க., வை தங்கள் கூட்டணிக்குள் எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், த.வெ.க.,வை நோக்கி காய் நகர்த்தத் துவங்கி உள்ளனர்.இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஒத்துவராது; இப்படித்தான், ஏற்கனவே கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, துவங்குவதற்கு முன்பாகவே பின்வாங்கினார் நடிகர் ரஜினி.அந்த வகையில் தான், அரசியல் பாதையில் நடிகர் விஜயும் நிலைக்க மாட்டார் என, அரசியல் பார்வையாளர்கள் துவக்கத்தில் கூறினர்.

உறுதியாகும் கட்டமைப்பு

ஆனால், அதையெல்லாம் விஜய் பொருட்படுத்தவில்லை. நிதானமாக திட்டமிட்டு அரசியல் செய்தால் போதும் என, கட்சியினருக்கு உத்தரவிட்டு அதன் வழியில் செயல்படுகிறார். பூத் கமிட்டி வலுவாக இருந்தால் மட்டுமே தேர்தலில் சாதிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், கட்சியின் அடிமட்டம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், பூத் கமிட்டி வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்லி, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதற்காக, பூத் முகவர்கள் கருத்தரங்கை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டு, முதற்கட்டமாக கோவையில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். அடுத்தடுத்தும், சென்னை, மதுரை என பூத் முகவர்கள் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுஉள்ளார். இந்த கருத்தரங்குகள் தமிழகம் முழுதும் நடத்தி முடிக்கப்படும்போது, கட்சியின் கட்டமைப்பு மிகவும் உறுதியாகிவிடும். த.வெ.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை, 80 லட்சத்தை தாண்டி விட்டது; 2 கோடி இலக்கை விரைவில் அடைவோம். இதெல்லாம் திட்டமிட்டப்படி நடந்து முடிந்தால், வரும் தேர்தலில் விஜய் 'கிங் மேக்கர்' ஆக இருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

angbu ganesh
மே 09, 2025 15:53

தீயமுக்கவுக்கு ஒரு loyala காலேஜ் அணிலுக்கு


Balasubramanian
மே 03, 2025 17:58

கிங் இல்லை! அந்தோ பரிதாபம் !


தொளபதி
மே 03, 2025 16:51

மிகைப்படுத்தப்பட்ட பதிவு. விஜய்காந்த் அவர்களுக்கு இதைவிட அதிகமான கூட்டம் கூடியது. இவரை விட கடுமையாக உழைத்தார். அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அனால் சினிமாவிலும் அரசியலிலும் இருந்த காலம் வரை நேர்மையாகத்தான் இருந்தார். பணம் கொடுத்து பில்டப் செய்து கொண்டதில்லை. லயோலா போல பின்னின்று உதவ யாரும் இல்லை. அவராலேயே எட்டு சதவீதத்தை தாண்ட முடியவில்லை. இவர் அதைவிட குறைவான வாக்குகளைத்தான் பெறுவார் என்பதை 2026 தேர்தல் நிரூபிக்கும்.


BHARATH
மே 03, 2025 11:58

என்னது 80 லட்சம் வாக்காளர்களா? பீலா உட்றதுக்கு அளவே இல்லையா??


kamal 00
மே 03, 2025 11:49

வந்தாலும் நம்மள சாவடிக்காம விட மாட்டானுக.... ஏன் இருக்குறத தின்னுட்டு வேலய பாருங்க....


ராமகிருஷ்ணன்
மே 03, 2025 11:09

ஓவர் பில்டப் நல்லதில்லை. பிளாப்பான படம் மாதிரி காணாமல் போயிடுவான்.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
மே 03, 2025 09:37

சங்கு மக்கர்.... அல்லேலூயா சோசப்பு விஜய்....2026 க்கு அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்....


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:38

அவர் அரசியலுக்கு வந்ததே கிங் ஆவதற்காக அல்ல .... மன்னர் குடும்பத்தின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில் கிங் மேக்கராக ஆவதற்குத்தான் ... ஆனா இப்படி நீங்க எழுதி எழுதி மன்னருக்கு டல்கோலக்ஸ் ஓவர் டோஸ் குடுக்குறீங்க ......


அப்பாவி
மே 03, 2025 08:20

கிங் மேக்கர்தான். கிங் இல்லை.கோவாலு


J.Leo
மே 03, 2025 08:14

மொத்த கூட்டணி எண்ணிக்கை தென் இந்திய மக்கள் தொகையை தாண்டும் போலவே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை