உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., - நா.த.க.,வுக்கு ஆட்களை சேர்ப்பது யார்? உளவுத்துறை விபரம் சேகரிப்பு

த.வெ.க., - நா.த.க.,வுக்கு ஆட்களை சேர்ப்பது யார்? உளவுத்துறை விபரம் சேகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் - த.வெ.க., - நா.த.க., கட்சிகளுக்கு ஆட்களை சேர்ப்பது யார் என்று உளவுத்துறையினர், அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் விபரம் சேகரிக்கின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை துவக்கி உள்ளன. தமிழகத்தின் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31be807c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்கட்சித் தலைவர் விஜய் வாரந்தோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பணிகளையும சில வாரங்கள் முடக்கியது. இந்நிலையில் கடந்த, பத்து நாட்களாக, அனைத்து கட்சிகளும் மீண்டும் தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. த.வெ.க., கூட, கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க நிர்வாகக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை மீண்டும் துவக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் த.வெ.க., மற்றும் நா.த.க., கட்சிகளுக்கு அதிகளவில் இளைஞர்கள் கூடுகின்றனர். இது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இரு கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைப்பது யார், அந்த கட்சிகளுக்காக யார் செலவு செய்கின்றனர், அவர்களின் பின்புலம் என்ன, அவர்கள் அந்த கட்சிகளில் வகிக்கும் பதவிகள் என்ன என்பது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த விபரங்களை, எஸ்.பி.சி.ஐ.டி., எனும் உளவுத்துறையினர் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக சேகரித்து, தங்களின் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இதன்மூலம், த.வெ.க., - நா.த.க., ஆகிய கட்சிகளில் உள்ள இளைஞர்கள், பெண்களின் ஓட்டுகள், பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தி.மு.க.,வின் அச்சம் வெளிப்பட்டுள்ளதாக, உளவுத்துறை போலீசாரே கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Anantharaman Srinivasan
அக் 31, 2025 19:30

திமுகவின் அனைத்து துறையிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவது கண்டு மக்கள் வேதனையுடன் செய்வதறியாது சலிப்பபடைந்திருப்பது உண்மை. இது 2026 தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.


Mr Krish Tamilnadu
அக் 31, 2025 18:06

இந்த வேலை செய்பவர்களுக்கு சம்பள பணம் கழகத்தின் பணமா?, இல்லை தமிழக வரி வருவாய் பணமா?.


Sun
அக் 31, 2025 15:52

உளவுத் துறை என்ன தி.மு.க என்ற கட்சியின் ஏவல் துறையா? இந்த வேலைல காட்டுற அக்கறையை உளவுத் துறை கரூர் த.வெ.க கூட்டத்திற்கு முன்பு காட்டியிருந்தால் 41 உயிர்கள் பலியாகி இருக்காது!


Mecca Shivan
அக் 31, 2025 13:38

இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆள் சேர்ப்பது ....


நிவேதா
அக் 31, 2025 10:58

நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் கட்சியை பார்த்து பயப்படுவதாக சொல்லி அதிமுகவை அசிங்கப்படுத்தும் செயலை திமுக செய்கிறது என நினைக்கிறேன்


கனோஜ் ஆங்ரே
அக் 31, 2025 10:16

கள நிலவரம் என்னென்னு தெரியாம... கண்டக்க, முண்டக்க...வா பதிவு போடுவதை நிறுத்துங்க... நா.த.க.. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டிருக்கும் கட்சி. அத்துடன் அது அரசியல் இயக்கம்... அதன் தொண்டர்கள் எங்கும் பரவி உள்ளனர். அந்த கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை நடத்தி தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறைக்கும் அதன் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அதைவிடுங்க...? புதுசா சொல்லி இருக்கீங்களே.. “த.வெ.க.” கட்சி... அதற்கு பேசிக்..அடிப்படை தளமே இல்லை... அந்த காலத்தில், எம்ஜிஆர் காலத்தில் “விசிலடிச்சான் குஞ்சுகள்” என்று சொல்லப்பட்ட ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். அந்த ரசிகளின் வயதை கணக்கிட்டு பார்த்தாலே தெரியும்... எல்லாமே 10, 11, 12, 13, 14 வயது விடலை பசங்க, பொண்ணுங்க? இந்த சின்னப்பசங்கள வச்சிட்டு... இவர் முதலமைச்சர் ஆயிடுவாராம்... கேக்குறவன கேணயன்னா, கேப்பைல நெய் வடியுது...ம்பாங்க, அதுபோலத்தான் இதுவும்... அதோடு, த.வெ.க. ஒரு அடிப்படை கட்டமைப்பே... இல்லாத கட்சி...


nagendhiran
அக் 31, 2025 17:19

விஜய் மாதிரி சீமானும் கூத்தாடிதான் கதைகளை நம்புவதற்கும் ஒரு அளவு இருக்கிறது? செத்தவர்களை வைத்தும் இறந்தவர்கள் பேசியதையும்? ட்ரென்ட் தகவல்களை பேசி ஏமாற்றுவது ஒரு கலை? அது சைமனிடம் நிறைய இருக்கு? 2026 நாகத தாவேகதான்"போட்டியே அனால் விஜயை கூட சைமனால் நெருங்க முடியாது என்பதுதான் நிஜம்.


கல்யாணராமன் சு.
அக் 31, 2025 18:10

என்னோட வாழ்க்கையிலே முதல் முறையா ஒரு sensible கருத்தை கனோஜ் ஆங்ரேயிடமிருந்து பெறும் வாய்ப்பை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி . ....


priyam vadan
அக் 31, 2025 20:39

அவ்ளோ ஈசி யா kanoj aangre முட்டு குடுக்க மாட்டார். எல்லாம் agenda குடுத்த assignment. வாங்குற வரும்படிக்கு விசுவாசமாக இருக்க பண்ணிக்க பட்டவர்கள்


கூத்தாடி வாக்கியம்
அக் 31, 2025 10:01

அடேய் தினமும் கொலை கொள்ளை னு நம்ம திராவிட அரசு தடுமாறி கிடக்கு இதுக்கு உளவு துறை எதுக்கு


திகழ் ஓவியன் AJAX ONTARIO
அக் 31, 2025 08:10

எவ்ளோ கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை நடக்கிறது. உளவுத்துறைக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இல்லையா? இல்லை அவர்கள் தங்களின் வேலையை மாற்றி விட்டனரா ? கேவலம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 20:02

உத்தர பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்களை இவர்கள் எதற்காக கண்காணிக்க வேண்டும்?


duruvasar
அக் 31, 2025 07:49

சேர்த்துதான் பாருங்க , இன்னொரு 23 கண்டிசன் போட்டு அடக்கிடுவோமல.


முக்கிய வீடியோ