உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி

மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடந்த ஜூலை 7 முதல் 34 நாட்களில், தமிழகத்தின் 100 சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணம் செய்து உள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, கடந்த ஜூலை 7ம் தேதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவங்கினார். இதுவரை கோவை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள, 100 சட்டசபை தொகுதிகளில், அவர் பிரசார பயணத்தை முடித்துள்ளார். பயணத்தின்போது, 'தாலிக்கு தங்கம்; மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு; அம்மா உணவகம்; அம்மா கிளினிக்; இலவச லேப்-டாப்; இலவச ஆடு, மாடு' என, அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை பேசினார். அதேபோல, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு; பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய்; தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை' என வாக்குறுதிகளையும் அளித்தார். தி.மு.க., அரசை கடுமையாக சாடிய பழனிசாமி, வி.சி., தலைவர் திருமாவளவன், இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆகியோரையும் விமர்சித்தார். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் உறுதி அளித்திருக்கிறார். பழனிசாமியின் பிரசார பயணத்தில், இடையில் சில நாட்கள் தவிர, 34 நாட்களில், 100 சட்டசபை தொகுதிகளில், 10,000 கி.மீ., பயணம் செய்து உள்ளார். இதில், 52 லட்சம் மக்கள் பங்கேற்றதாக அ.தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. தி.மு.க., வலுவாக உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ethiraj
ஆக 24, 2025 11:58

It is a pity our male members in TN not able to provide few thousands s month to travel or incidental expenses to their daughter,sister,mother And wife. One and only APPA our TN CM borrowing money from market and supplying to this poor ladies. These loans with interest will be paid back by male tamil as taxes. Why introduce freebies after availing loans Our leader TTV Dinakaran paid from his personal funds 20000 each sometime back


Ramanathan R
ஆக 23, 2025 13:54

முதியோர்கள் பேன்சன், மற்றும் ரேஷனில் வாங்கும் பொருட்களுக்கு, உரிய பணத்தை அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டால் போதும், இப்படி செய்தால் இரண்டு ரேஷன் கார்டுகள் வைத்து இருப்பவர்களை கலை எடுக்கலாம், இலவச கல்வி, இலவச மருத்துவம் இரண்டுமே, ஒருசில முன்னால் முதல்வர்கள் ஜாதி பார்த்து கொடுத்தது, போல இல்லாமல் கொடுத்தால் போதும், மற்ற படி எந்த வித இலவசமும் எங்களுக்கு தேவை இல்லை, முதலில் ரேஷனில் பொருட்கள் வினியோகம் இல்லாம் இருந்தால் போதும், இலவச பணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை. நன்றி வணக்கம்


Thamo Dharan
ஆக 22, 2025 12:23

டம்ளக் ஸ்டாலின் சார் தரலாம் என்றும் கிண்டலித்து 1000 தரவில்லை இந்தவருடம் எமர்த்திவிட்டார்கள். எக்ஸ் வாக்குறுதி கோபியூப்பர் என்று ஒரு நம்பிக்கை.


Kirubai
ஆக 21, 2025 19:38

வாக்குறுதி என்று சொல்வதை எல்லாம், சொல்லும் எவரும் தனது கட்சி நிதியில் இருந்தோ, சொந்த பணத்தில் இருந்தோ, அல்லது கொள்ளையடிக்கும் பணத்தில் இருந்தோ கொடுக்கப் போவதில்லை, மாறாக மக்கள் மீது வரி என்ற பெயரில் பிடுங்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படுகிறது.. நாடு இப்போது வெள்ளையர்களிடம் இருந்து விடுபட்டு கொள்ளையர்களிடம் சிக்கி தவிக்கிறது...


ManiMurugan Murugan
ஆக 21, 2025 18:39

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா வின் பீ டீ ம் அதாவது தி மு கா இளைஞர் அணி என்பதாலா ஒவ்வொரு முறையும் தவறாக நாதக உறுதி செய்கிறார்கள்.அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி திமுக கூட்டணி என்று இவர்களா மாற்றம் கொண்டு வருவார்கள்,காசில் பங்கு போடுவார்கள்...


K.SANTHANAM
ஆக 21, 2025 17:53

ரஜினி திரைப்படத்தில் கூறிய மாதிரி மக்களுக்கு வேலையை கொடுங்க. தானாகவே அவர்களுக்கான பொருட்களை வாங்கி கொள்வார்கள்


Ramesh Sargam
ஆக 21, 2025 13:25

திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி இலவசங்களை கொடுத்துதான் மக்கள் வாக்குகளை ஈர்க்கவிரும்புகிறார்கள். நாங்கள் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி வழங்குவோம் என்று கூறி மக்களை அவர்கள் ஈர்ப்பதில்லை. வேதனை.


Suresh Velan
ஆக 23, 2025 16:04

தமிழ் நாட்டில் முக்கால் வாசி தமிழர்கள் லஞ்சம் வாங்கும் தமிழர்கள் , அதனால் இப்படிப்பட்ட லஞ்சம் கொடுப்போம் என்று அரசியல்வாதிகளும் சொல்ல வேண்டிய கேவல நிலைமை ஏற்பட்டுள்ளது . இந்த மாதிரி நீங்க லஞ்ச ஆசை காட்ட வில்லை என்றால் யாரும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் . முக்கால் வாசி தமிழக மக்கள் லஞ்சம் வாங்கும் விஷங்கள் என்பதை உணருங்கள் , இந்த மாதிரி லஞ்சம் ஒழிய தமிழக மக்கள் மாற வேண்டும் , நீங்களும் நானும் மாறினால் போதாது .


Narayanan Muthu
ஆக 21, 2025 11:59

எப்படியும் இந்த பொது தேர்தலுடன் அமித்ஷாத் திமுகவிற்கு மூடுவிழா நிச்சயம் என்பதால் அள்ளி விடுகிறார்.


S.L.Narasimman
ஆக 21, 2025 10:48

ஏழைகளுக்கு ஆடு மாடு கோழி, இலவச திட்டம் கிராமத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும். அம்மா உணவகம் நகரத்து தொழிலாளர்களின் பசிபோக்க உதவும்


Hariharan Karthikeyan
ஆக 21, 2025 10:46

மொத்தத்தில் தமிழகம் திவாலாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை