செவாலியே செல்லான் நாயகர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி: செவாலியே செல்லான் நாயகர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி சட்டசபை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சி தலைவர் சிவா, ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.