மேலும் செய்திகள்
நெற்பயிற்களில் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
19-Jun-2026
சேத்தியாத்தோப்பு: டிரான்ஸ்பார்மர் பழுதால் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த ஆண்டிப்பாளையத்தில் வயல்வெளி மின் டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதடைந்தது. இதனால், 30 ஏக்கரில் விளைநிலங்கள் பாசனம் தடைபட்டு நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள், பெண்கள் நேற்று காலை வயலில் இறங்கி அகரபுத்துார் துணைமின்நிலைய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மதியம் 12:15 மணியளவில் கலைந்து சென்றனர்.
19-Jun-2026