கூலி தொழிலாளி பலி
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம், அம்மன் நகரை சேர்ந்தவர் குமார், 52; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய குமாருக்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த குமார், நேற்று அதிகாலை வீட்டின் வெளியே வந்தபோது, கை, கால் இழுத்த நிலையில் மயங்கி விழுந்தார். இதைகண்ட அவரது மனைவி வள்ளி, உறவினர்கள் உதவியுடன் குமாரை மீட்டு ஊசுடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.