மேலும் செய்திகள்
3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி
20-Jun-2026
நெல்லிக்குப்பம்: நுாதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லிக்குப்பம் காந்தி தெருவை சேர்ந்தவர் ரவி. சிமண்ட் கடை உரிமையாளர். இவரது மொபைல் போனுக்கு நேற்று காலை வந்த, ‘லிங்க்’கை கிளிக் செய்தார். அதில், காரில் செல்லும் போது சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்றதால் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 38 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிந்தது. கடலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Jun-2026