மேலும் செய்திகள்
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
24-Apr-2026
புதுச்சேரி: மாநில அளவிலான போட்டியில் புதுச்சேரி என்.சி.சி., முதலிடம் பிடித்து அசத்தியது. தேசிய மாணவர் கடற்படை பிரிவின் 2026–-27 ஆண்டுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையிலான போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் புதுச்சேரி என்.சி.சி., பிரிவு முதல் இடத்தை பிடித்து அசத்தியது. தமிழ்நாட்டின் சென்னை பிரிவு இரண்டாம் இடத்தையும் பெற்றது. வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பதக்கம், விருதுகளை செல்வகணபதி எம்.பி., வழங்கி, பாராட்டினார். கமாண்டிங் ஆபிசர் அபெய் சிங், எக்சிகியூட்டி ஆபிசர் சித்து, தலைமை பயிற்சியாளர் தீபக், என்.சி.சி., இணை அதிகாரிகள், இந்திய கடற்படை வீரர்கள், மாநில அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
24-Apr-2026