வங்காள விரிகுடாவின் பிரதிபலிப்பு உரையாடல்
புதுச்சேரி: உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ஐ.என்.டி.பி., (பிரான்ஸ்) மற்றும் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே இணைந்து வங்களா விரிகுடாவின் பிரதிபலிப்புகளில், பாண்டிச்சேரியில் ஏற்றமும், இறக்கமும் என்ற தலைப்பில் உரையாடல் நடந்தது. அலையன்ஸ பிரான்சே அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் அவசரநிலை, அறிவியல் தரவுகள், கல்வித்துவமான புனைவுகளை ஒன்றிணைந்து கடற்கரையின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துாண்டும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது. ஏரளாமன பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.