மேலும் செய்திகள்
‘மேகதாது திட்டத்திற்கு களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்’
30 minutes ago
புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முன்னாள் சேர்மன் சிவகாந்தன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். புதுச்சேரி லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, நெல்லித்தோப்பு தொகுதி என்.ஆர்.காங்., பொறுப்பாளரும், முன்னாள் சேர்மன் சிவகாந்தன் தலைமையில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர், டி.ஆர்.நகரில் முதல்வர் ரங்கசாமி திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். ஓட்டு சேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., நிர்வாகி சவுந்தர்ராஜன், முன்னாள் சேர்மன்கள் சுந்தரி, ஆனந்தலட்சுமி, மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், வடிவேல், கணபதி, சந்துரு, பிரபு, குவைத் குமார், ஜனார்த்தனன், ரிஷி, தினேஷ், மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
30 minutes ago