உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

  புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு  தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி  முகாம் நடந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பயிற்சி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு  ஆணைய தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர்  ஜெயப்ரியா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  சீனியர் எஸ்.பி., கலைவாணன், போக்சோ சட்டம், வழக்கு பதிவு செய்யும் முறை, விசாரணை செயல்முறைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பேசினார்.  ரீனாஈஸ்வர்யா மற்றும் வக்கீல் ரவி , போக்சோ சட்டம், குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை கண்டறிதல் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் நடைமுறைகள் குறித்து பயிற்சியளித்தனர்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ