உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவியாளர் தேர்வுக்கு பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவியாளர் தேர்வுக்கு பயிற்சி

புதுச்சேரி : எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு, உதவியாளர் எழுத்து தேர்வுக்கு, வரும் 14ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்குகிறது.இதுகுறித்து, துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி, கோட்டூர்சாமி செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான, தேசிய வாழ்வாதார சேவை மையத்தில், உதவியாளர் பணி எழுத்து தேர்விற்கு, புதுச்சேரி எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது. இந்த வகுப்பு வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. பயிற்சி வகுப்பில், அனைத்து பாடங்களிலும், அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.விருப்பமுள்ள எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவர்கள், புதுச்சேரி நடேசன் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதாரம் சேவை மையத்தை நேரில் அணுகி, தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 8870073622, 6369094931 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி