உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் பிரச்னையில் தொழிலாளி தற்கொலை

கடன் பிரச்னையில் தொழிலாளி தற்கொலை

காரைக்கால்: கடன் பிரச்னையில் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், கோட்டுச்சேரி பூவம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 40; கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா; இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடன் பிரச்னை காரணமாக செந்தில்குமார் தனது வீடு மற்றும் பொருட்களை விற்று கடன்களை அடைத்து வந்தார். இந்த கடன் பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார், நேற்று முன்தினம் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது உறுவினர்கள், செந்தில்குமாரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்ததை உறுதி செய்தார். கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !