மண்டல அபிேஷகம் நிறைவு
நெய்வேலி மே 14–: நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. கடலுார் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் கடந்த மார்ச் 25 ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக நடந்து வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவு பெற்றது. இதனையொட்டி என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, கோவில் கும்பாபிஷேக விழா மலரை வெளிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் அண்ணாதுரை, என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் திருக்குமார், துணை பொது மேலாளர் ராமமூர்த்தி, இந்து சமய நிலைத்துறை அதிகாரிகள், விழா உபயதாரர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகங்கள் நடந்தன. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் விதியுலா மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. நிறவைாக, கும்பிஷேகம் சிறப்பாக நடந்தேறிட உதவிய அனைத்து தரப்பினருக்கும் அறங்காவலர்கள் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.