உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், மக்கள் மன்றம் நிகழ்ச்சி எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நடந்தது.இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.இதில், சைபர் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை விரைவில் மீட்டுத்தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எஸ்.பி., பாஸ்கரன், பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, பொது மக்கள் தவறவிட்ட 2 லட்சத்த 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 15 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி