வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம். நுகர்வோர் ஆணையங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நுகர்வோர் ஆணையம் மட்டுமல்ல, நுகர்வோர் சட்டமும் கூறுகின்றது. ஆனால் கொடுமை என்னவென்றால் மூன்று வருடங்களுக்கு மேலாகியும் நான் பதிவிட்டுள்ள ஒரு வழக்கு முடிக்கப் படாமலிருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இவ்வழக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பாக தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீதே ஆணையம் தவறை திருத்திக் கொள்ள மூன்று வருடங்களுக்கு மேலாகியும் முடியவில்லை என்பதே. சட்டத்தை சம்பந்தப்பட்டவர்களே மதிப்பதில்லை. அறிவுரைகள் மற்றவர்களுக்குத் தான், தமக்கே அல்ல..