7 சவரன் நகை, 3.50 லட்சம் பணம் திருட்டு வேப்பூர் அருகே இரு இடங்களில் துணிகரம்
வேப்பூர், : வேப்பூர் அருகே கடை மற்றும் வீட்டிற்குள் புகுந்து 7 சவரன் நகை மற்றும் ரூ. 3.50 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள், 36. இவர், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே மாட்டுத் தீவன கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, பீரோவில் இருந்த ரூ. 3.30 லட்சம் பணத்தை காணவில்லை.நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்ற பிறகு, மர்ம நபர்கள் சிலர், கடையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி சென்றுள்ளனர்.மேலும், அதே பகுதியில் வீட்டில் தனியாக வசிக்கும் ராயப்பன் மனைவி பூங்கொடி, 60; என்பவரது வீட்டிற்குள் புகுந்து, பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.இதுகுறித்து அருள் மற்றும் பூங்கொடி இருவரும் கொடுத்த புகாரின்பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.