உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல் உலகப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

முதல் உலகப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

புதுச்சேரி: முதல் உலகப் போர் நிறைவு பெற்றதன், 106வது நினைவு நாளையொட்டி, உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள வீரர் நினைவு துாணில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணை துாதர் எட்டியென் ரோலண்ட் பியக், அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் செலுத்தினர்.முதல் உலப் போரின் போது, உயர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில், இந்தியா, பிரான்ஸ் நாட்டு தேசிய கொடிகள் ஏற்பட்டது. பின், இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இருநாட்டு ராணுவ படை பிரிவுகளின் முக்கிய அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை