என்.ஆர்.காங்., இலக்கிய அணி நிர்வாகிகள் நியமணம்
புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர். காங்., மாநில கலை மற்றும் இலக்கிய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து என்.ஆர்.,காங்., மாநில செயலாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கை:என்.ஆர்.,காங்., தலைவரும், முதல்வர் ரங்கசாமி ஒப்புதலோடு, அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில கலை மற்றும் இலக்கிய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கலை மற்றும் இலக்கிய அணி மாநில தலைவராக செந்தாமரைக் கண்ணன், துணை தலைவர் களாக மீனாட்சி சுந்தரம், அரிகிருஷ்ணன், ராஜேந்திரன், செல்வம், சங்கர், வீரப்பன், அமுதா, சுதாகர், ரவிக்குமார், பார்வதி, சக்தி, மாநில செயலாளர்களாக குமார், சக்தி, முருகேசன், மெய்யழகன், மோகன், தீபன், விஜய் ஆனந்த், மாநில இணைச் செயலளராக செல்வராஜ், கோவிந்தம்மாள், மங்கையர்கரசி, லதா, சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.