உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது

பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் அருகே பொது இடத்தில் தகராறு செய்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர் வழியாக சென்றவர்களை தரக்குறைவாக பேசி, தகராறு செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி