மேலும் செய்திகள்
பணியிட மாறுதல் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கோரிக்கை
19-Apr-2025
புதுச்சேரி: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 84 மையங்களில் நடந்தது. அதில் ஆண், பெண், என மொத்தம் 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான ஆன்சர் கீ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால், https://recruitment.py.gov.in இணைதளத்தில் பார்த்து கொள்ளலாம் என நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
19-Apr-2025