உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் அமைக்கும் பணி

வாய்க்கால் அமைக்கும் பணி

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ஏரி வாய்க்காலில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை, தொகுதி நைனார்மண்டபம், பாக்கியம் நகர் பகுதிக்கு செல்லும் முருங்கப்பாக்கம் ஏரி வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 36 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில், கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ