விநாயகர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர் வலம்புரி வெற்றி விநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் சாந்தி நகர் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.சிறப்பு அழைப்பளர் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.