உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்தல் விதிமீறல் சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு

 தேர்தல் விதிமீறல் சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பர தட்டிகளை வைத்த நெல்லித்தோப்பு தொகுதி சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரவி விஸ்வகர்மா, தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று நெல்லித்தோப்பு தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, லெனின் வீதியில், சுயேச்சை வேட்பாளர் சின்னம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர தட்டி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அனுமதி காலம் முடிந்த பிறகும், அந்தப் பேனர் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்த,புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை