உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு கூட்டம்

கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி: தேசிய அளவிலான கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று நடந்தது.கடலோர பாதுகாப்பு எஸ்.பி. பழனிவேல் வரவேற்றார். மீன் வளத்துறை இயக்குநர் இஸ்மாயில், துணை இயக்குநர் ராஜேந்திரன், கிழக்கு எஸ்.பி. ஈஷா சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி பேசுகையில், கடலோர பாதுகாப்பில் மீனவ சமுதாய மக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. மீனவர் படகுகளை போன்று, அந்நிய சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எனவே விழிப்புணர்வுடன் இருந்து கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மும்பை தாக்குதல் சம்பவம் போல் நடக்கக்கூடாது என்பதற்காகவே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கடலில் மட்டுமல்ல, மீனவ கிராமங்களுக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் வந்து சென்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.இதில், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜ் உள்ளிட்ட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது, மீனவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு, சீனியர் எஸ்.பி., கடலோர பாதுகாப்புக்காக 200 ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்படயுள்ளனர்.கடலில் நீச்சல் அடிக்கும் தகுதியை விதிகளில் கொண்டுவர முடியுமா என டி.ஜி.பி.,யிடம் பேசி கோப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ