கல்லுாரி மாணவி மாயம்
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 22; மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த 11ம் தேதி காலை 8:00 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.