உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு நடுநிலை பள்ளியில் வண்ணங்கள் தின விழா

 அரசு நடுநிலை பள்ளியில் வண்ணங்கள் தின விழா

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில், மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சரோஜினி தலைமை தாங்கினார். ஆசிரியர் சரோஜா வரவேற்றார். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த வண்ணங்களில் உடை மற்றும் முகக் கவசம் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு வண்ணங்களில் புத்தகம், பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சிவமதி, சதீஷ், பாலகிருஷ்ணன், கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி