புகார் பெட்டி...
நாய்கள் தொல்லை
மேட்டுப்பாளையம் வி.பி.சிங்., நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.நீலகண்டன், மேட்டுப்பாளையம். தெரு விளக்கு எரியவில்லை
தட்டாஞ்சாவடி காந்தி நகர், 3வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.சரஸ்வதி, காந்திநகர்.தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் பகுதியில், மின் விளக்கு இல்லாமல் அப்பகுதியில் இருண்டு கிடக்கிறது.கவி, தவளக்குப்பம். உயர் மின் அழுத்த கம்பத்தால் அபாயம்
சந்தை புதுகுப்பம் வள்ளலார் நகரில் உயர் மின் அழுத்த கம்பம் கீழே விழும் அபாய நிலையில் இருப்பதால், உடனடியாக சரி செய்ய வேண்டும்.சுதாகர், சந்தை புதுக்குப்பம். குண்டும் குழியுமான சாலை
வில்லியனுார் தக்கக்குட்டை ரோடு, மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நீலா, கோபாலன்கடை.