நெட்டப்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம்
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் துப்புரவு பணிகள் தொடர்பாக எச்.ஆர் ஸ்கொயர் நிறுவன ஊழியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் துப்புரவு பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.