உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயனாளிகளுக்கு தவணை வழங்கல்

பயனாளிகளுக்கு தவணை வழங்கல்

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில், கல் வீடு கட்டுவதற்கு தவணை தொகைக்கான ஆணையை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில், வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகைக்கான ஆணையை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், கள ஆய்வாளர் இளங்கோவன், தி.மு.க. நிர்வாகிகள் ராமசாமி, ஜலால், ரமணன், ஹாலித், ஷாஜகான், அங்காளன், சரவணன், கோபி, ஹரிகிருஷ்ணன், ஜெகன்மோகன், ஏழுமலை, அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை