மேலும் செய்திகள்
14 ஐ.ஏ.எஸ்.,கள் மாற்றம்
19-Apr-2025
துணை தாசில்தார்கள் இடமாற்றம்..
02-May-2025
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண்துறை செயலர் உட்பட ௨ ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். புதுச்சேரி வேளாண்துறை, கலைப்பண்பாட்டு துறை, ஹிந்து அறநிலையத் துறை, வக்ப், ரயில்வேதிட்டம் உள்ளிட்ட துறைகளில் செயலராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நெடுஞ்செழியன் டில்லிக்கும், காரைக்கால் கலெக்டர் சேமசேகர் அப்பாராவ் கொட்டாரு லட்சத்தீவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா டில்லிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டில்லியில் பணியாற்றி வரும் கிருஷ்ணன மோகன் உப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணியாற்றி வரும் ரவி பிரகாசம், ஸ்மிதா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் சவுத்ரி முகமது யாசின், லட்சத் தீவில் பணியாற்றி வரும் விக்ராந்த்ராஜா உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகரிகள் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணியாற்றி வரும் ஏ.கே.லால், டில்லியில் பணியாற்றி வரும் நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
19-Apr-2025
02-May-2025