உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு பணி

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு பணி

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் வி.வி., பாட் இயந்திரம் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியது. தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மற்றும் வி.வி., பாட் இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில்,மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது. முதல் தற்செயல் கலப்பு, (முதல் ரேன்டமினேஷன்)இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட (இ.வி.எம். மேலாண்மை அமைப்பு 2.0) மென் பொருள் மூலம், கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. இந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் இயந்திரங்களை இன்று (19ம் தேதி) ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் உள்ள பாதுகாப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைக்கப்பட உள்ளது. வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு முதற்கட்ட தற்செயல் கலப்பு செய்யப்பட்ட மின்னணு மற்றும் வி.வி.பாட் இயந்திரங்களின் பட்டியல் அனைத்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என, தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ