தேசிய தொழுநோய் திட்டத்தில் பயனாளிகளுக்கு உபகரணம்
புதுச்சேரி: தேசிய தொழுநோய் திட்டத்தில் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி அரசு நலவழித்துறை தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில், தொடர் சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் காலனிகள் நேற்று வழங்கப்பட்டது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தலைமை தாங்கினார். தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட உதவி இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். இதில் பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.