உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கூடா நட்பு கேடாய் முடிந்தது

 கூடா நட்பு கேடாய் முடிந்தது

புதுச்சேரி: தவறான பழக்கத்தால், இரு குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 33 வயது நபர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்ததால் அவரை, கண்டித்தார். இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த 21ம் தேதி தற்கொலைக்கு முயன்றார். ஜிப்மரில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது கணவர், போலீ சில் புகார் அளிக்கப் போவதாக, அப்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு தகவல் தெரிந்து, அச்சத்தில், நேற்று முன்தினம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சிகிச்சையில் இருந்த பெண் நேற்று இறந்தார். தவறான பழக்கத்தால் அடுத்தடுத்து இரு உயிர்கள் பிரிந்தது, இரு குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் எதிர் காலமும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ