வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.73.80 லட்சம் நிதியுதவி
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில், குடிசை மாற்று வாரியம் மூலம், வீடு கட்டும் திட்டத் தின் கீழ், 73.80 லட்சத்திற்கான நிதியுதவி ஆணையை வழங்கப்பட்டது.தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதல் தவணையாக ரூ.1.20 லட்சம் வீதம், 2 நபர்களுக்கு ரூ.2.40 லட்சம், இரண்டாவது தவணையாக ரூ.1.60 லட்சம் வீதம், 28 நபர்களுக்கு ரூ.44.80 லட்சம், மூன்றாவது தவணையாக, 70 ஆயிரம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.26.60 லட்சம் ரூபாய் என, மொத்தம் 73.80 லட்சம் ரூபாய்க்கான அரசாணையை சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தராஜன், உதவிப் பொறியாளர் அணில்குமார், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.