கார் மோதி மீனவர் காயம்
காரைக்கால் : காரைக்காலில் அடையாளம் தெரியாத கார் மோதி மீனவர் காயம்.நாகப்பட்டினம் மேலவாஞ்சூர் அமிர்தா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன், 54 ;என்பவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்கு தனது பைக்கில்சென்றுள்ளனர்.சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியதில் சுந்தர்ராஜன் பலத்த காயம் அடைந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசுமருந்துவனையில் சேர்த்தனர். திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி., கேமரா பதிவு மூலம் விபத்தை ஏற்படுத்திய கரை போலீசார் தேடிவருகின்றனர்.