முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் விழா
புதுச்சேரி: என்.ஆர்.காங்.,தெற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பிறந்தநாள் விழா இருளன்சந்தை மதுராவில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாப்பட்டது. பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் கன்னியக்கோவிலில்திரண்டு தியாகராஜனை வரவேற்றனர். பின் மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் முடிந்து, அங்கிருந்து ஊர்வலமாக சென்று முள்ளோடை நுழைவு வாயிலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்துபாகூர் மூலநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின், இருளன்சந்தையில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டு, பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, முன்னாள் அமைச்சர் தியாகராஜனுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், பொது செயலாளர் ஜெயபால், கட்சி நிர்வாகி ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.