உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முன்னாள் சபாநாயகர் தார்பாய் வழங்கல்

 முன்னாள் சபாநாயகர் தார்பாய் வழங்கல்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு முன்னாள் சபாநாயகர் தார்பாய் வழங்கினார். புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் லாஸ்பேட்டை தொகுதியில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தார்பாய், 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு ஆகியவற்றை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார். நிகழ்ச்சியில் தொகுதிச் சேர்ந்த என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி