மேலும் செய்திகள்
சாரதாம்பாள் கோவிலில் மகா ருத்ர ஹோமம்
08-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், 50ம் ஆண்டு சாரதா நவராத்திரியை முன்னிட்டு நேற்று காயத்திரி ஹோமம் நடந்தது. புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 50ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் 3ம் தேதி துவங்கியது. அதையொட்டி, 4ம் நாளான நேற்று (6ம் தேதி) காலை 8:00 மணி முதல் 10:30 வரை துார்க்கா சூக்த ஹோமம், 10:30 மணி முதல் 12:30 வரை காயத்திரி ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சங்கீத சலங்கை நாட்டியாலயாவின் பரதம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 8:00 மணி முதல் 10:30 வரை மகாருத்ர ஹோமம், சுயம்வராபார்வதி ஹோமம், 10:30 மணி முதல் 12:30 வரை கந்தர்வ ராஜா ஹோமம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி மகாசண்டி ஹோமமும், 12ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
08-Oct-2024